கீரனூர் அருகே உள்ள துவாரவயல் என்ற கிராமத்தை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர் கூலி வேலை பார்த்து வருகிறார்.இவருடன் இவர் மனைவி மற்றும் 2 குழந்தைகள் வசித்து வருகின்றன, இவர் நேற்று வேலைக்கு செல்லாமல் நண்பர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் மைதானத்திற்கு சென்று கிரிக்கெட் விளையாடி உள்ளார்,
அது மட்டுமல்லாமல் இரவு வீட்டிற்கு வரும்போது குடிபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார், இதை பார்த்து அவர் மனைவி அவருடன் சண்டை போட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் கணவன், மனைவியிடையே சண்டை உருவாகி உள்ளது.இதனால் மது போதையில் இருந்த கணவர் வீட்டிலிருந்த மனைவியின் சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதையறிந்த உடனே அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு புதுக்கோட்டையில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி திருநாவுக்கரசு உயிரிழந்துள்ளார்.பின் திருநாவுக்கரசின் உடல் உடற்கூறு ஆய்வு செய்து வீட்டிற்கு ஆம்புலன்ஸ் மூலம் எடுத்து வந்துள்ளனர். அங்கு அவருடைய மனைவி திருநாவுக்கரசின் உடலை பார்த்து கதறி அழுது மயங்கி கீழே விழுந்துள்ளார்,
திருநாவுக்கரசின் மனைவியை அவர்களது குடும்பத்தினர் உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளன. அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக கூறியுள்ளனர், திருநாவுக்கரசு, வினிதா இவர்கள் இருவருக்கும் 4வயதில் 1 ஆண் குழந்தை 1 வயதில் 1 பெண் குழந்தை என 2 குழந்தைகள் உள்ளனர்,
இந்த சிறிய வயதில் தாய், தந்தையை இழந்த அந்த சிறு குழந்தைகளின் கதறலை பார்த்து அப்பகுதி மக்கள் பெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.
கணவன், மனைவி இருவரும் ஒரே நேரத்தில் இறந்ததால், அவர்களின் குழந்தைகள் தனியாக நிற்பதை பார்த்து, இவர்கள் குடும்பத்தில் இருப்பவர்கள் மிகவும் வருத்தத்துடனும், துயரத்துடனும், குழந்தைகளை எப்படி காப்பாற்ற போகிறோம் என்ற சோகத்திலும் ஆழ்ந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தையும் சோகத்தையும் உருவாக்கி உள்ளது.