fbpx

ஆசை வார்த்தை கூறி 17 வயது சிறுமியை சீரழித்த இளைஞர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது…..!

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் ரீதியான குற்றங்கள் தமிழகத்தில் அதிகரித்து வருகின்றன. இதனை தடுப்பதற்கு மாநில அரசும், காவல்துறையும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. ஆனாலும் இந்த குற்றங்கள் குறைந்த பாடில்லை.

காவல்துறை என்ன தான் இது போன்ற குற்றங்களுக்கு எதிராக பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், பெண்களிடம் இது குறித்து சரியான விழிப்புணர்வு இல்லாததால் தான் இது போன்ற குற்றங்கள் அதிகரித்து வருகின்றன என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே இருக்கின்ற திருணாக்குளம் கிராமத்தைச் சேர்ந்த சசிகுமார் என்பவரின் மகன் வீரமணி (25) இவர் கூலி வேலை பார்த்து வருகிறார் இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13ம் தேதி புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 17 வயது சிறுமி ஒருவரை ஆசை வார்த்தை கூறி திருப்பூருக்கு அழைத்துச் சென்றார்.

அதோடு சிறுமியின் பெற்றோர் சிறுமி கடத்தப்பட்ட மறுநாள் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழங்கிய புகாரை அடிப்படையாகக் கொண்டு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதனை அடுத்து கடந்த 21 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29ஆம் தேதி திருப்பூரிலிருந்து சிறுமியை அதிகாரிகள் மீட்டனர். அதோடு சிறுமியின் உடலில் உண்டான மாற்றங்களை கவனித்து உடல் பரிசோதனை செய்த போது அவர் பாலியல் ரீதியாக வன்கொடுமையில் ஈடுபடுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

அத்துடன் இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட வீரமணியை புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல்துறையை சார்ந்தவர்கள் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மகிலா நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த வழக்கத்திற்கான தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. நேற்று மதியம் 12 மணியளவில் மகிளா நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பில் நீதிபதியை சத்தியா வீரமணி குற்றவாளி என்று அறிவித்தார்.

அத்துடன் 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுத்திய குற்றத்திற்காக வீரமணிக்கு ஆயுள் தண்டனையும், 2.5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியிருக்கிறார்.

அதோடு, அந்த அபராத தொகையில் 2️ லட்சம் ரூபாய் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தான் இதனை தொடர்ந்து, தண்டனை பெற்ற குற்றவாளியான வீரமணியை திருச்சி மத்திய சிறையில் அடைக்க காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.

Next Post

விருப்பத்திற்கு மாறாக நடந்த குடும்பத்தினர்…..! விபரீத முடிவு எடுத்த பள்ளி மாணவி….!

Thu Feb 16 , 2023
சில பெற்றோர்கள் பிள்ளைகளை பெற்று விட்டால் அந்த பிள்ளைகள் கடைசி வரையில் நம்முடைய பேச்சை மட்டுமே கேட்க வேண்டும் என்று நினைக்கிறார்கள், அப்படி நினைப்பது தவறல்ல. ஒரு வயதிற்கு மேல் பிள்ளைகளுக்கும் சுய விருப்பு, வெறுப்பு இருக்கும் என்பதை தற்போதைய பெற்றோர்கள் புரிந்து கொள்வதில்லை. ஆண் பிள்ளைகளுக்கே இப்படி என்றால் பெண் பிள்ளைகளுக்கு கேட்கவா வேண்டும்? நாம் எடுக்கும் முடிவு சரியானதாக தான் இருக்கும் என்று ஒரு சில பெற்றோர் […]

You May Like