மைசூர் பகுதியில் ஓய்வுபெற்ற உளவுத்துறை அதிகாரியான குல்கர்னி என்ற 82 வயது பெற்ற நபர் சென்ற வெள்ளிக்கிழமை அன்று மாலையில் மானச கங்கோத்ரி வளாகத்தில் வழக்கம் போல் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தார்.
அந்த நேரத்தில் , எதிரே அதிவேகமாக வந்த கார் ஒன்று குல்கர்னி மீது மோதியது. ஆகாயத்தில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனை தொடர்ந்து சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அங்கு இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் பெரும் அதிர்ச்சி தகவல் ஒன்று கிடைத்தது.
வீடியோவில் அதிவேகதத்தில் நெம்பர் பிளேட் இல்லாமல் வந்த காரானது வேண்டும் என்றே குல்கர்னி மீது மோதிவிட்டு சென்றிருப்பது பதிவாகி இருக்கிறது. அத்துடன், இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.