fbpx

சூடு பிடிக்கும் கர்நாடக தேர்தல் களம்…..! மோடி சோனியா காந்தி என்று அடுத்தடுத்து பிரச்சாரத்தில் இறங்கும் தலைவர்கள்…..!

விரைவில் கர்நாடக மாநிலத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. அதன் காரணமாக காங்கிரஸ் பாஜக உள்ளிட்ட இரு கட்சிகளும் அந்த மாநிலத்தில் ஆட்சியைப் பிடிப்பதற்கு தீவிரமாக களமிறங்கி இருக்கின்றனர்.

அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட பலரும் அங்கே தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு இருக்கின்றன. என்ற நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி நாளை கர்நாடகத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட உள்ளார்.

சமீபத்தில் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்த ஜெகதீஷ் ஷட்டரை ஆதரிக்கும் விதமாக ஹுபள்ளி தார்வாட் பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் சோனியா காந்தி பங்கேற்க உள்ளார். இதற்காக நாளை நண்பகல் கர்நாடகாவிற்கு செல்லும் சோனியா காந்தி பிற்பகல் 3 மணி அளவில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுக் கொள்கிறார். நாளைய தினம் பிரதமர் நரேந்திர மோடியும் பெங்களூர் நகரில் 36 கிலோ மீட்டர் தூரம் வாகன பேரணியில் பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Post

ஓபிஎஸ் தரப்பிடம் உள்ள அதிமுகவிற்கு சொந்தமான பொருட்கள் அனைத்தையும் சி.வி. சண்முகத்திடம் ஒப்படைக்க வேண்டும்…..! நீதிமன்றம் விதித்த அதிரடி உத்தரவு…..!

Fri May 5 , 2023
சென்ற ஜூலை மாதம் 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தின் போது அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற மோதலில் அலுவலகத்தில் இருந்த கட்சி குறித்த அசல் பத்திரங்கள், ஆவணங்கள், ரசீதுகள் கட்சியின் பெயரில் இருக்கின்ற சொத்து ஆவணங்கள் போன்ற பொருட்களை பன்னீர்செல்வம் தரப்பினர் எடுத்துச் சென்று விட்டனர் என்று புகார் எழுந்தது. இது குறித்து கடந்த ஜூலை மாதம் 23ஆம் தேதி சி.வி. சண்முகம், சென்னை, ராயப்பேட்டை காவல் துறையில் […]
டெண்டர் முறைகேடு..! எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆதாரங்கள் உள்ளது..! - அறப்போர் இயக்கம்

You May Like