fbpx

தொடங்கியது கோடை காலம்……! கோடை விடுமுறையில் உயர் நீதிமன்றம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…..!

பொதுவாக மே மாதம் உயர் நீதிமன்றத்திற்கு விடுமுறை வழங்கப்பட்டு அந்த கோடை காலங்களில் தாக்கல் செய்யப்படும் வழக்குகளை விசாரிப்பதற்கு சிறப்பு நீதிபதிகள் அமைக்கப்படுவார்கள்.

அந்த நீதிபதிகள் அடங்கிய சிறப்பு அமர்வுதான் கோடை காலத்தில் தாக்கலாகும் வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்கும். இது எப்போதும் இருக்கின்ற ஒரு நடைமுறைதான் என்றாலும் கூட தற்போது இதற்கான அறிவிப்பை சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ளது.

அதாவது சென்னை உயர் நீதிமன்றத்தின் கோடை விடுமுறை காலத்தில் தாக்கலாகும் அவசர வழக்குகளை விசாரிக்கும் அமர்வுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.

அதில் பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா உள்ளிட்ட 29 நீதிபதிகள் வழக்குகளை விசாரிப்பார்கள் என்றும் உயர்நீதிமன்றத்தில் மே மாதம் முதல் வாரம் மட்டும் செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் மனுத்தாக்களும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமையில் விசாரணையும், நடைபெறும் எனவும் மற்ற வாரங்களில் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் மனு தாக்கல் மற்றும் புதன் வியாழன் உள்ளிட்ட கிழமைகளில் விசாரணை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

PS-2 வெற்றி பெற்றார்களா சோழர்கள்…..? பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தின் ட்விட்டர் விமர்சனம்…..!

Fri Apr 28 , 2023
மாபெரும் எழுத்தாளர் கல்கியின் கைவண்ணத்தில் உண்மையும், கல்கியின் சில கற்பனைகளும் கலந்து சோழர்களின் வரலாறு பொன்னியின் செல்வன் என்ற பெயரில் 5 பாகங்களாக எழுதப்பட்டது. இந்த பொன்னியின் செல்வன் நாவலை படித்த பல பிரபலங்கள் மற்றும் திரைத்துறை கலைஞர்கள் எல்லோரும் நிச்சயமாக இந்த நாவலை படமாக எடுக்க வேண்டும் என்று முயற்சித்தார்கள். எம்ஜிஆர் காலம் தொட்டே இந்த முயற்சி தொடங்கப்பட்டது. அதாவது எம்ஜிஆரை வைத்து இந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் […]

You May Like