fbpx

ஆஸ்திரேலிய போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்…….!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தைச் சார்ந்தவர் முஹம்மது ரஹ்மதுல்லா சையது அஹ்மது 2019 ஆம் வருடம் விசிட்டிங் விசாவில் ஆஸ்திரேலியாவிற்கு சென்ற இவர் அங்கு இருக்கக்கூடிய உணவகம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார் இந்த சூழ்நிலையில், சிட்னி மேற்கு ரயில் நிலையத்தில் நேற்று தொடர்வண்டிக்காக காத்திருந்த போது 28 வயதான தூய்மை தொழிலாளர் ஒருவரை ரஹமத்துல்லா கத்தியால் குத்தி இருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து, அருகில் உள்ள காவல் நிலையத்திலிருந்து இரண்டு காவல்துறை சார்ந்தவர்கள் அவரை நெருங்கி வந்தனர். அப்போது அவர்களையும் ரஹ்மத்துல்லாஹ் கத்தியை காட்டி மிரட்டியதுடன் தாக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக, காவல்துறையினர் அவரை 3 முறை துப்பாக்கியால் சுட்டு இருக்கிறார்கள். இதில் நெஞ்சில் 2 குண்டுகள் பாய்ந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் இந்த செய்தியை சிட்னி மார்னிங் ஹெரால்ட் என்ற செய்தி நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.

Next Post

’ஒருத்தர்னு சொல்லிட்டு 10 பேர் வருவாங்க’..!! ’பிறப்புறுப்பில் பீர் பாட்டில விடுவாங்க’..!! கதறும் ரவுடி பேபி சூர்யா..!!

Wed Mar 1 , 2023
டிக்டாக்கில் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர் ரவுடி பேபி சூர்யா. இவரின் நிஜப்பெயர் சுப்புலட்சுமி. டிக்டாக்கில் வரம்பு மீறி ஆபாச உடைகளை அணிந்தும், ஆபாச வார்த்தைகளை பேசியும் வீடியோக்களை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார். இதன் காரணமாக பலருடனும் சண்டை போட்டு காவல்நிலையத்தில் புகார்களும் அளிக்கப்பட்டது. ஜிபி முத்துவுடன் சண்டை போட்டது, டிக்டாக் இலக்கியாவை பாலியல் தொழிலுக்கு அழைத்தது என பரபரப்பை ஏற்படுத்தினார். அதோடு, திருச்சியில் விபச்சாரம் நடந்த ஒரு இடத்திலும் ரவுடி […]

You May Like