கேரள மாநிலம் கன்னூரில் இருக்கும் அரசு உதவிபெறும் துவக்கப் பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வருபவர் பி இ கோவிந்தன் நம்பூதிரி(50). இவர் துவக்கப்பள்ளியில் கணக்கு ஆசிரியராக இருந்து வருகிறார். துவக்க பள்ளியில் படிக்கும் சிறுமிகளிடம், ஆசிரியர் போர்வையில் தனது கொடூர செயல்களை செய்துள்ளாளார். கணக்கு பாடத்தில் சந்தேகம் கேட்டு வந்த ந்ன்கு சிறுமிகளிடம் பாடம் சொல்லிகொடுப்பது போல் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். கடந்த 2014-ஆம் வருடம் முதல் 2015 ஆம் வருடங்களில், நான்காம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு படிக்கும் 12 வயதுக்கு கீழ் இருக்கும் நான்கு சிறுமிகள் ஒரு சிறுவன் என ஐந்து பேரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
ஆசிரியர் கோவிந்தனின் இந்த கேவலமான செயல், சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்ததை அடுத்து, அந்த ஆசிரியரை, போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர். அவருக்கு எதிரான வழக்கு விசாரணை கோழிகோட்டில் இருக்கும் தளபிரம்ப்பா விரைவு கோர்ட்டில் நடைபெற்றது. கல்வி மையங்களில் மாணவிகளுக் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுப்பது, 12 வயதுக்கு கீழ் இருக்கும் சிறார்களுக்கு பாலியல் தொல்லை அளிப்பது போன்ற சட்டங்களின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதில், மூன்று சட்டப்பிரிவுகளின் கீழ் பதியப்பட்ட குற்றச்சாட்டுகள் தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து ஒவ்வொரு சட்டப்பிரிவுக்கும் தலா 7 வருடங்கள் வீதம் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பளித்தது. இதன்படி பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியருக்கு 79 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டு லட்சத்து 17 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.