தமிழகம் உட்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நோய் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அரசு சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி அரசு மருத்துவமனைகளில் முக கவசம் கட்டாயமாக அணிய வேண்டும் என சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
இத்தகைய சூழ்நிலையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருக்கின்ற அனைத்து நீதிமன்றங்களிலும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் தனபால் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் நீதிமன்றங்களில் அலுவலர்கள், ஊழியர்கள், வழக்கறிஞர்கள் போன்ற எல்லோரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. தனிமனித இடைவேளையை பின்பற்ற வேண்டும் எனவும், கைகளை அடிக்கடி சுத்தப்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல நீதிமன்ற அறை, நீதிபதிகள் அறை, நீதிமன்ற வளாகத்தில் கிருமி நாசினி தெளிக்கவும், நுழைவாயில் மற்றும் முக்கிய பகுதிகளில் கிரிமிநாசினி வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதோடு வழக்கு பட்டியலில் இல்லாத வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திற்கு வருவது முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.