தமிழ்நாடு முழுவதும் மெடிக்கல் போன்ற இடங்களில் அரசு அனுமதி பெறாத மற்றும் மருத்துவ படிப்பு தகுதி இல்லாத சிலர் பொதுமக்களுக்கு மருத்துவம் பார்ப்பது, ஊசி போடுவது போன்ற பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இத்தகைய நிலையில் தான் தமிழகத்தில் போலி மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. ஆகவே போலி மருத்துவர்கள் தேடும் பணியில் காவல்துறையினர் முடிக்கி விடப்பட்டுள்ளனர். அந்த விதத்தில் தமிழ்நாடு முழுவதிலும் போலி மருத்துவர்கள் கண்டுபிடித்து காவல்துறை அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்து வருகிறது.
மருத்துவ படிப்பு தகுதி இல்லாமல், அதோடு அரசாங்கத்தால் அங்கீகாரம் வழங்கப்படாத மருத்துவ முறையில் மருத்துவம் செய்து வருபவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. அந்த உத்தரவின் அடிப்படையில் திருவாரூர் போன்ற மாவட்டங்களில் கடந்த 10 தினங்களில் 72 போலி மருத்துவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.