திமுகவின் ஊழல் பட்டியல் வெளியிடப்படும் என்று பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை முன்பே தெரிவித்திருந்தார். அதோடு, அவர் அணிந்திருக்கும் சர்ச்சைக்குரிய ரபேல் வாட்ச் தொடர்பான திமுகவின் சந்தேகத்தையும் தீர்த்து வைப்பதாக அவர் கூறியிருந்தார்.
அதன்படி இன்று தமிழகத்தின் ஆளும் தரப்பான திமுகவின் ஊழல் பட்டியலை வெளியிடுவதற்கு முன்னால் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அண்ணாமலை தான் அணிந்திருக்கும் ரஃபேல் வாட்சின் பில்லை வெளியிட்டார் அண்ணாமலை அந்த வாட்சை சுமார் 3 லட்சம் ரூபாய்க்கு வாங்கியதாக அந்த பில்லில் ஆதாரம் இருக்கிறது என்று கூறப்படுகிறது.
இதன் பிறகு திமுகவின் ஊழல் பட்டியலை வெளியிட்ட அண்ணாமலை, நேரடியாக முதலமைச்சர் ஸ்டாலின் மீது ஊழல் குற்றச்சாட்டை வைத்து பரபரப்பை உண்டாக்கியுள்ளார். டெண்டர் குறித்து முதலமைச்சர் ஸ்டாலினுக்கு சிங்கப்பூர் நிறுவனம் 200 கோடி ரூபாய் கொடுத்ததாகவும் இந்த பணம் கடந்த 2011 ஆம் ஆண்டு திமுகவின் தேர்தல் செலவுக்காக வழங்கப்பட்டதாகவும் கூறி இருக்கிறார்.
அதோடு, அமைச்சர்கள் ஏ.வ. வேலு, கே என் நேரு மற்றும் தூத்துக்குடியின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோரின் சொத்து பட்டியலையும் அவர் வெளியிட்டுள்ளார் தமிழகத்தில் ஆட்சியில் இருந்த அதிமுக போன்ற அனைத்து கட்சிகளின் ஊழல் பட்டியலும் வெளியிடப்படும் என்றும் கூறியுள்ளார்.இதன் காரணமாக, அதிமுக உள்ளிட்ட பல முக்கிய கட்சிகள் அடுத்து என்ன நடக்குமோ என்ற பதட்டத்துடனே இருக்கின்றன.