தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதம் முழுவதுமே வார இறுதியில் தொடர்ந்து விடுமுறைகள் விடப்பட்டு வந்தனர். தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி மற்றும் ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகைகள் தொடர்ந்து வந்து கொண்டிருந்ததால் வார இறுதி நாட்களில் தொடர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டதால் பலரும் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு சென்று வந்தனர். தற்சமயம் தமிழகத்தில் நாளை முதல் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டு இருக்கிறது.
ஏப்ரல் மாதம் தொடர்ந்து விடுமுறை வழங்கப்பட்டதால் வெளியூர்களில் பணியாற்றும் பிற மாவட்ட நபர்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு சென்று பண்டிகைகளை மிகவும் சிறப்பாக கொண்டாடினார்கள். அதற்கு ஏதுவாக பேருந்துகள் ரயில்கள் உள்ளவையும் இயக்கப்பட்டனர்.
அந்த வகையில், வரும் திங்கள்கிழமை தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் விடுமுறை அறிவிக்கப்படும் அதேபோன்று நாளை சனிக்கிழமை மற்றும் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை என 2 நாட்களோடு சேர்த்து ஒட்டுமொத்தமாக இந்த வார இறுதியில் 3 நாட்கள் விடுமுறை வருகிறது.
ஆகவே வெளியூரில் வேலை பார்ப்பவர்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கு பேருந்து மற்றும் ரயில்களில் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்து வருகிறார்கள். அந்த வகையில் நீங்களும் விடுமுறை உங்களுடைய சொந்த ஊருக்கு சென்று மகிழ்ச்சியாக கொண்டாடலாமே.