fbpx

திருடிய பொருட்களுடன் ரயில் நிலையித்தில் தூங்கிய திருடர்கள்! தட்டித்தூக்கிய போலீஸ்!

சென்னை மாம்பலத்தில் வசித்து வருபவர் கணேஷ் பாபு நேற்று இரவு இவரது வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து அங்கிருந்த நகை, பணம் உள்ளிட்டவற்றை திருடி சென்றுள்ளனர். இதனை அறிந்த கணேஷ்பாபு மாம்பலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், சென்னை, எழும்பூர் ரயில்வே ஸ்டேஷனில் குடிபோதையில் 2 நபர்கள் படுத்து உறங்கிக் கொண்டு இருந்துள்ளனர் என தெரியவந்துள்ளது இதன் பேரில் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே போலீஸ் அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் அவர்கள் இருவரிடமும் விசாரணை நடத்தியுள்ளனர். அதில் அவர்கள் இருவரும் சரியான தகவல் அளிக்காததன் பேரில், அவர்கள் மேல் சந்தேகப்பட்ட போலீசார், அவர்கள் வைத்திருந்த பைகளை சோதனை செய்துள்ளனர். அந்தப் பையில் 7 சவரன் நகை மற்றும் 50 ஆயிரம் ரொக்கப் பணம் இருந்துள்ளது. அதனால் அவர்களின் மேல் சந்தேகம் கொண்ட ரயில்வே அதிகாரிகள் அவர்களிடம் விசாரணையை தீவிர படுத்தியதில் அவர்கள் அம்பத்தூர் அருகே உள்ள மண்ணூர்பேட்டையைச் சேர்ந்த பெயிண்டர் சையது அப்துல் ஹக்கீம் ( 37) மற்றொரு நபர் ஆட்டோ ஓட்டுனர் என்றும், பாடியைச் சேர்ந்த குமார் (29) என்பதும் தெரியவந்துள்ளது. இதனால் அவர்கள் இருவரையும் மாம்பலம் காவல்துறையிடம் ரயில்வே போலீசார் ஒப்படைத்தனர். அவர்களிடம் விசாரணை செய்த மாம்பலம் போலீசார் அவர்கள் ஏற்கனவே திருட்டு, வழிப்பறி, கொள்ளை போன்ற ஈடுப்பட்டு, வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, நீலாங்கரை, அம்பத்தூர், பட்டாபிராம், ஆவடி கொரட்டூர், நவம்பூர் போன்ற பகுதிகளில் வழக்குகள் அவர்களின் மீது இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

Next Post

மதுரையைச் சேர்ந்த தொழிலதிபரின் மகளை கடத்தி மிரட்டல்! காவல்துறையினர் எடுத்த அதிரடி ஆக்சன்!

Wed Dec 28 , 2022
தமிழ்நாடு முழுவதும் தற்போது கடத்தல் கொலை கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்து வருகின்றனர். அந்த வகையில் மதுரையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் கார்த்திகை செல்வம் என்பதற்கு இரண்டு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். அவர்கள் கடந்த 2017 ஆம் வருடம் டிசம்பர் மாதம் 16ஆம் தேதி திடீரென்று காணாமல் போயினர். இது தொடர்பாக காவல்துறையில் புகார் வழங்கப்பட்டது இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் […]
’கில்லி’ பட பாணியில் பெண் கேட்ட தாய் - மகன்..!! பிளஸ்1 மாணவியை கட்டாய திருமணம் செய்து கொடுமை..!!

You May Like