fbpx

போலீஸ் ஜிப்பில் அமர்ந்திருந்தவரை… இழுத்து போட்டு அடித்த திருநங்கைகள்..!

சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் நேற்று இரவு திருநங்கைகள் சிலருக்கும்,  பேருந்து நிலையத்தில் நின்றிருந்த ஒருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. திருநங்கைகள் அந்த நபருடன் தகராறு செய்து கொண்டிருந்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த ரோந்து போலீசார் இரு தரப்பையும் சமாதானபடுத்தினர்.

ஆனால் எதை பற்றியும் கவலைபடாத திருநங்கைகள் அந்த நபரை தாக்கினர். அவரை மீட்ட காவல்துறையினர் ரோந்து வாகனத்தின் பின்புறம் அமர வைத்தனர். ரோந்து பணியில் இருந்த காவல்துறையினரின் சமாதானத்திற்கு ஒத்துவராத திருநங்கைகள், தொடர்ந்து ஆவேசமாக பேசிய படி போலீஸ் ஜீப்பின் பின்புற கதவை திறந்து, அந்த நபரை இழுத்து போட்டு அடித்தனர்.

இந்தக் சம்பவத்தை பேருந்து நிலையத்தில் இருந்த பயணி ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், திருநங்கைகளால் தாக்கப்பட்ட நபர் காவல்துறையில் புகார் எதுவும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது

Baskar

Next Post

காதல் ஜோடிக்கு திருமணம் செய்து வைத்த திமுக பிரமுகர்; காரை எரித்து நாசமாக்கிய பெண்ணின் அண்ணன்..!

Tue Aug 30 , 2022
தேனி மாவட்டம் சின்னமனூர் தேரடி தெருவை வசித்து வருபவர் பாண்டி. இவரது மகள் மல்லிகா (24). இவரது மாமனார் ஊரான கூழையனூரை சேர்ந்த ஈஸ்வரனின் மகன் தினேஷ்குமார் (28). மல்லிகாவும், தினேஷ்குமாரும் கடந்த எட்டு வருடங்களாக காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு இரு குடும்பத்தினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனால் காதல் ஜோடி தங்களது வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். இதற்காக அவர்கள், தங்களது உறவினரான […]

You May Like