fbpx

அழகு நிலையம் என்ற பெயரில் விபச்சார விடுதி நடத்திய இருவர் அதிரடி கைது…..! 2 பெண்கள் மீட்பு திருச்சி அருகே பரபரப்பு…..!

திருச்சி அருகே புத்தூர் ஈ.வி.ஆர் சாலையில் இருக்கின்ற ஒரு அழகு நிலையத்தில் விபச்சாரம் நடத்தப்படுவதாக விபச்சார தடுப்பு பிரிவு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், விபச்சார தடுப்பு பிரிவு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அதனை சோதனையில் ஈடுபட்டனர் அதில் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 2 பெண்களை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

மேலும் கருமண்டபம் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகன் ராஜ்பாபு (27) மற்றும் திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியில் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரின் மகன் அஜித்குமார் (27) உள்ளிட்ட இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பின்னர் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் திருச்சி நீதிமன்றத்தில் அவர்கள் இருவரையும் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். எத்தனை தொடர்ந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டு வந்த 2 பெண்களும் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Next Post

பல்கலைகழகத்தில் நடந்த பயங்கர சம்பவம்…..! மாணவியை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட காதலன்…..!

Sat May 20 , 2023
உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் ஷிவ் நாடார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் காண்பூரைச் சேர்ந்த அனுஜ் என்ற மாணவர் படித்து வருகிறார். மேலும் இவர் தனுடன் படிக்கும் மாணவியான நேகா என்ற பெண்ணை காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இப்படியான சூழ்நிலையில் தான் யாரும் எதிர்பாராத விதத்தில், திடீரென்று தன்னிடம் இருந்த துப்பாக்கி எடுத்து காதலி நேகாவை சரமாரியாக சுட்டு இருக்கிறார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து அவர் […]
திருமணத்திற்கு மறுத்த இளம்பெண்..! கொலையும்.. தற்கொலையும்..! ஒருதலை காதல் சோகம்..!

You May Like