காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டதை கண்டிக்கும் விதமாக காங்கிரஸ் கட்சியின் சட்டசபை உறுப்பினர்கள் இன்று சட்டப்பேரவைக்கு கருப்பு சட்டை அணிந்தும், கையில் பதாகைகளுடனும் சட்டப்பேரவைக்கு வருகை தந்தனர்.
மத்திய அரசுக்கு எதிராக நேரம் கொண்டு வர இருக்கின்ற சூழ்நிலையில் தற்சமயம் சட்டப்பேரவை நிகழ்வுகளில் பங்கேற்றுக் கொண்டுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் சட்டசபை உறுப்பினர்கள். இத்தகைய சூழ்நிலையில் தான் சட்டப்பேரவையின் நிகழ்வுகளில் பங்கேற்றுக் கொள்வதற்காக வந்த பாரதிய ஜனதா கட்சியின் சட்டசபை உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசன் கருப்பு புடவையுடன் பேரவைக்கு வந்ததை தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர்கள் பதிவு செய்தனர்.இதனை பார்த்த வானதி சீனிவாசன் இன்று தெரியாமல் கருப்பு புடவை அணிந்து வந்து விட்டேன் என்று சிரித்தவாறே சட்டப்பேரவைக்குள் நுழைந்தார்