விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே இருக்கின்ற சிந்தாமணி கிராமத்தைச் சார்ந்த 17 வயது சிறுவனும் ஐயங்கோவில்ப்பட்டு கிராமத்தைச் சார்ந்த 17 வயது சிறுமி ஒருவரும் சிந்தாமணியில் இருக்கின்ற ஒரு பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் வெகு நாட்களாக காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த சூழ்நிலையில்தான் அந்த சிறுவனும், சிறுவியும் நேற்று முன்தினம் இரவு விக்கிரவாண்டி அருகே இருக்கின்ற செங்கமேடு ஏரிக்கரைக்கு சென்று இருவரும் தனிமையில் உரையாடிக் கொண்டு இருந்ததாக சொல்லப்படுகின்றது. அப்போது அந்த பகுதிக்கு வந்த 3 பேர் கொண்ட மரண கும்பல் ஒன்று இருவரையும் தாக்கி அவர்களிடம் இருந்த நகை பணம் கைபேசி உள்ளிட்டவற்றை பறித்திருக்கிறார்கள்.
அத்துடன் சிறுவனை கத்தியால் குத்தி விட்டு அந்த 17 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். கத்தியால் குத்தியதால் படுகாயம் அடைந்த சிறுவனும், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமியும் தற்சமயம் முண்டியம்பாக்கத்தில் இருக்கின்ற அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த கொடூர சம்பவம் தொடர்பாக, விக்கிரவாண்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விழுப்புரம் உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் பார்த்திபன் தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகிறார்கள்.