fbpx

வைரல் வீடியோ… பதற வைக்கும் காட்சி… ஓடும் ரயில் முன் நின்று ரீல் வீடியோ… மாணவர் தலையில் ரயில் மோதி படுகாயம்..!

தெலுங்கானா மாநிலம் வாடேபள்ளியில் வசித்து வருபவர் அக்‌ஷய் ராஜ் (17) பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார். சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பவர். ஓடும் ரயில் அருகில் நெருங்கி ஆக்ஷன் ஹீரோவாக போஸ் கொடுத்து ரீல் வீடியோ எடுக்க முயன்ற போது வேகமாக சென்ற ரயில் அவர் தலை மீது மோதியது. இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

ரயில்வே போலீஸ் ஒருவர் ரயில்வே தண்டவாளத்தில் அக்‌ஷய் இரத்தத்துடன் இருப்பதை பார்த்துள்ளார். உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அகஷய் ராஜ் அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு தனியார் ஹாஸ்பிட்டலுக்கு மாற்றப்பட்டார். அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக கூறும் நிலையில், அவருக்கு காலில் எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளது. மேலும் முகத்தில் காயங்கள் ஏற்பட்டுள்ளன.

https://twitter.com/VishalDharm1/status/1566470675706945541

காசிப்பேட்டை ரயில்வே காவல்துறையினர் கூறும் போது, அக்‌ஷய் தனது இரண்டு நண்பர்களுடன் இன்ஸ்டாகிராம் வீடியோ எடுக்க பல்ஹர்ஷாவில் இருந்து வாரங்கல் செல்லும் ரெயில் செல்லும் பாதையில் நின்று இருக்கிறார். அப்போது வேகமாக வந்த ரயில் தலையில் மோதியதில், அவர் படுகாயம் அடைந்து ஹாஸ்பிடலில் சேர்க்கப்பட்டு இருக்கிறார் என கூறினர்.

Baskar

Next Post

மக்களே கவனம்.. இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்.. 5 நாட்களுக்கு மழை தொடரும்..

Mon Sep 5 , 2022
தமிழகத்தில் வரும் 9-ம் தேதி வரை கனமழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. சென்னை வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தமிழக பகுதிகளின் மேல்‌ நிலவும்‌ வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, ஈரோடு கோவை, திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌, ஈரோடு, மதுரை, கரூர், திருச்சி, […]
மக்களே உஷார்..!! அதி கனமழை..!! 3 மாவட்டங்களுக்கு கடும் எச்சரிக்கை..!!

You May Like