திருச்சி அண்ணாநகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் இவருக்கு அமர்நாத் (28), ரகுநாத் (25) என்ற இரு மகன்கள் இருக்கின்றன இருவரும் காந்தி மார்க்கெட் பகுதியில் இருக்கின்ற ஒரு பழக்கடையில் சுமை தூக்கும் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்கள். அமர்நாத்துக்கு மாரியம்மாள்(25) என்ற மனைவியும் 2 குழந்தைகளும் இருக்கின்றனர்.
அமர்நாத் தன்னுடைய மனைவி மற்றும் மகன்களுடன் தனியாக வசித்து வந்தார்.ரகுநாத் தன்னுடைய தாய் தந்தையுடன் வசித்துவந்துள்ளார். இந்த நிலையில் ரகுநாத் தன்னுடைய அண்ணனை பார்ப்பதற்காக அடிக்கடி அவருடைய வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். அப்போது தன்னுடைய அண்ணி மாரியம்மாளுடன் அவருக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. அதோடு இருவரும் தங்களுடைய செல்போன்களில் மாறி, மாறி ஆபாச படங்களை பரிமாறிக் கொண்டதாக தெரிகிறது.
இந்த கள்ளக்காதல் விவகாரம் நாட்கள் செல்ல செல்ல அமர்நாத்திற்கு தெரிய வந்துள்ளது. இருவரையும் பலமுறை அமர்நாத் கண்டித்ததாக சொல்லப்படுகிறது. ஆனாலும் தொடர்ச்சியாக இருவரும் நெருக்கமாக பழகி வந்துள்ளனர். இத்தகைய நிலையில், பாத்திரம் கொண்ட அமர்நாத் தன்னுடைய மனைவியின் கழுத்தை வெட்டியதில் மாரியம்மாள் அலறியபடியே ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்துள்ளார். அதன் பிறகு வெட்டிய அந்த கத்தியுடன் அமர்நாத் திருச்சி கோட்டை காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
இதில் படுகாயமடைந்த மாரியம்மாள் உயிருக்கு ஆபத்தான நிலையில், திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக கோட்டை காவல் நிலைய போலீசார் அமர்நாத் மீது கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள்.