திருவள்ளூர் மாவட்டம் ஒண்டி குப்பம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரசாத் (28) இவர் படப்பை பகுதியில் உள்ள ஒரு மொபைல் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். இவருக்கும், இவருடைய உறவுக்கார பெண்ணான பவானி என்ற பெண்ணுக்கும் கடந்த 2019 ஆம் வருடம் திருமணம் நடந்துள்ளது இந்த நிலையில், இந்த தம்பதிகளுக்கு தற்போது ஒன்றரை வயதில் ஒரு குழந்தை இருக்கிறது.
இத்தகைய நிலையில் தான் படப்பை பகுதியின் பணிபுரிந்து வரும் பிரசாத்துக்கும், அதே தொழிற்சாலையில் பணியாற்றி வரும் கவிதா என்ற பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் காதலாக மாறியிருக்கிறது. இதனால் பவானி மற்றும் பிரசாத் உள்ளிட்டோருக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது கடந்த ஒரு வருட காலமாக மனைவியிடம் இதன் காரணமாக, பேசாமல் இருந்திருக்கிறார் பிரசாத். அத்தோடு கவிதா என்ற பெண்ணுடன் அவர் தொடர்பில் இருந்ததால், அடிக்கடி வீட்டிற்கு வராமல் வெளியிலேயே தாங்கி இருந்திருக்கிறார்.
இது தொடர்பாக மனைவி பவானிக்கு தெரிய வந்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதற்கு நடுவே கள்ளக்காதலி கவிதா பிரசாத் மனைவிக்கு தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு தனக்கும், பிரசாத்திற்கும் திருமணம் நடந்து விட்டது. என்றும் நான் 3 மாதம் கர்ப்பமாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும் அவரை ஏன் வீட்டுக்குள் வைத்து பூட்டி வைத்து இருக்கிறீர்கள்? அவரை விருப்பம் போல வாழ விடுங்கள் என்று தெரிவித்துள்ளார். இதன் ஆடியோவும் தற்போது வெளியாகி இருப்பதாக சொல்லப்படுகிறது.
அதோடு கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் ஒரு வருட காலமாக குழந்தையை கூட பிரசாத் தூக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி வாக்குவாதம் தகராறு உள்ளிட்டவை ஏற்பட்டு வந்திருக்கிறது. இந்த நிலையில், நேற்று இரவு கணவனுடன் தொலைபேசி பேசிய பின்னர், பவானி அவரது படுக்கை அறையில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது தொடர்பாக தகவல் அறிந்த பவானியின் உறவினர்கள் உடனடியாக பவானியை திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு பரிசோதித்த போது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என்று மருத்துவர்கள் கூறி இருக்கிறார்கள்.
இந்த தகவல் பவானியின் பெற்றோருக்கு கிடைத்தவுடன், இது தொடர்பாக மணவாளநகர் காவல் நிலையத்தில் வழங்கிய புகாரை அடிப்படையாகக் கொண்டு, பிரசாத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி ஒன்றரை வயது குழந்தை இருக்கும் நிலையில், கணவன் மற்றொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததை அறிந்து கொண்ட மனைவி தூக்கிட்டுப் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருவள்ளூர் பகுதியில் வரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.