நாமக்கல் மாவட்டம் சுல்தான்பேட்டை ஜேடர்தெருவை சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் வாடகை வீட்டில் குடியிருந்து வந்தார். இவருடைய கணவர் லாரி ஓட்டுநர் என்பதால் வெளி மாநிலத்திற்கு வேலைக்காக சென்றுள்ளார். அந்த பெண் தன்னுடைய குழந்தையுடன் வீட்டில் தனியாக வசித்து வந்திருக்கிறார். இத்தகைய நிலையில் தான் அதிகாலையில் அந்தப் பெண் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது முகமூடி அணிந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் அந்த பெண்ணின் மாயை பற்றி பலாத்காரம் செய்ய முயற்சி செய்திருக்கிறார்கள்.
எப்படியோ அவர்களிடமிருந்து தப்பித்து வீட்டை விட்டு வெளியே வந்து சாலையில் ஓடி வந்த அந்த பெண், கூச்சலிட்டதால் அக்கம், பக்கத்தினர் உடனடியாக வெளியே ஓடிவந்து பார்த்தனர். இதனைக் கண்ட முகமூடி அணிந்திருந்த மர்ம நபர்கள் இருசக்கர வாகனங்களில் ஏறி அங்கிருந்து தப்பி சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அந்த பகுதியில் மக்கள் காவல் நிலையத்திற்கு புகார் வழங்கினர். இந்த புகாரை அடிப்படையாகக் கொண்டு, வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு, விசாரணை நடத்தி வருகின்றன. கணவர் வேலைக்கு வெளியூர் சென்றுள்ளார் என்பதை தெரிந்தவர்கள்தான் இந்த கூட்டு பாலியல் பலாத்காரம் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கிறார்கள்.