fbpx

பொங்கல்‌ பண்டிகையை முன்னிட்டு…! இன்று முதல் 12-ம் தேதி வரை…! யாருமே எதிர்பார்க்காத அறிவிப்பு…!

தமிழ்நாடு மகளிர்‌ மேம்பாட்டு நிறுவனம்‌ சார்பில்‌, ஆங்கிலப்‌ புத்தாண்டு மற்றும்‌ பொங்கல்‌ பண்டிகையை முன்னிட்டு, சென்னை, நுங்கம்பாக்கம்‌, அன்னை தெரசா மகளிர்‌ வளாகத்தில்‌ மகளிர்‌ சுய உதவிக்‌ குழுக்கள்‌ தயாரிக்கும்‌ பொருட்களின்‌ ஆங்கிலப்‌ புத்தாண்டு மற்றும்‌ பொங்கல்‌ விற்பனைக்‌ கண்காட்சியினை இளைஞர்‌ நலன்‌ மற்றும்‌ விளையாட்டு மேம்பாட்டுத்‌ துறை அமைச்சர்‌ உதயநிதி ஸ்டாலின்‌ இன்று துவக்கி வைக்கவுள்ளார்‌.

பொங்கல் பரிசு ரூ.1,000..!! இதை செய்தால்தான் உங்களுக்கு பணம் கிடைக்கும்..!! எளிய டிப்ஸ் இதோ..!!

இக்கண்காட்சியில்‌, தமிழ்நாடு மகளிர்‌ மேம்பாட்டு நிறுவனத்தின்‌ கீழ்‌ அனைத்து மாவட்டங்களிலும்‌ செயல்பட்டு வரும்‌ மகளிர்‌ சுய உதவிக்‌ குழுக்களின்‌ தயாரிப்புப்‌ பொருட்களான முந்திரிப்‌ பருப்பு வகைகள்‌, மசாலாப்‌ பொருட்கள்‌, வீட்டு உபயோகப்‌பொருட்கள்‌, நாட்டுச்‌ சர்க்கரை, சத்து மாவு, சுடுமண்‌ சிற்பங்கள்‌, கால்‌ மிதியடிகள்‌, பட்டு மற்றும்‌ பருத்திப்‌ புடவைகள்‌, கண்ணாடி ஓவியங்கள்‌, கைவினைப்‌ பொருட்கள்‌, பனை ஓலைப்‌ பொருட்கள்‌, பொம்மைகள்‌, காபிப்‌ பொடி, மிளகு, இயற்கை மூலிகைகள்‌, செயற்கை ஆபரணங்கள்‌, சிறுதானியங்கள்‌, பாரம்பரிய அரிசி வகைகள்‌, பரிசுப்‌ பொருட்கள்‌, ஆயத்த ஆடைகள்‌, மரச்‌ சிற்பங்கள்‌, இயற்கை உரங்கள்‌, தேன்‌, கடலை மிட்டாய்‌, மூலிகை பொடிகள்‌ போன்றவை விற்பனை செய்யப்படவுள்ளன.

மேலும்‌, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம்‌, வாழ்ந்து காட்டுவோம்‌ திட்டம்‌ஆகியவற்றின்‌ வழிகாட்டுதலில்‌ செயல்படும்‌ சுய உதவிக்‌ குழுக்கள்‌, திருநங்கையர்‌ சுயஉதவிக்‌ குழுக்களும்‌ தங்களின்‌ தயாரிப்புப்‌ பொருட்களை விற்பனை செய்ய உள்ளனர்‌.பிளாஸ்டிக்‌ பொருட்களுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படுத்தாத துணிப்‌ பைகள்‌, மஞ்சப்‌ பைகள்‌ விற்பனை செய்யும்‌ அரங்குகளும்‌ அமைக்கப்பட்டுள்ளன. பாரம்பரிய சுவை மிகுந்த உணவுகளை உண்டு களித்திட உணவு அரங்கம்‌ போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.கண்காட்சி துவக்க நாளன்று கலைநிகழ்ச்சிகளும்‌ நடைபெறுகின்றன.

2022 டிசம்பர்‌ 30ஆம்‌ தேதி முதல்‌ 2023 ஜனவரி 12ஆம்‌ தேதி வரை நாள் தோறும்‌ காலை 10.00 மணி முதல்‌ இரவு 08.00 மணி வரை நடைபெபறும்‌ ஒஇக்கண்காட் சிக்கு அனுமதி இலவசம்‌. இந்தக்‌ கண்காட்சியை அனைவரும்‌ கண்டு களித்து, மகளிர்‌ சுய உதவிக்‌ குழுக்கள்‌ தயாரித்த தரமான பொருட்களை வாங்கி பயனடைவதோடு, மகளிர்‌ சுய உதவிக்‌ குழுக்களின்‌ பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவிட வேண்டும்‌‌.

Vignesh

Next Post

சற்று முன்: பிரபல கால்பந்து ஜாம்பவான் மரணம்...! பெரும் சோகத்தில் ஆழ்ந்த ரசிகர்கள்...!

Fri Dec 30 , 2022
பீலே என்று அழைக்கப்படும் பிரபல பிரேசில் கால்பந்து ஜாம்பவான் எட்சன் அரான்டெஸ் டோ நாசிமெண்டோ, தனது 82வது வயதில் காலமானார். கால்பந்தாட்டத்தின் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவராக பரவலாகக் கருதப்படும் பீலே, பிரேசிலிய கிளப் சாண்டோஸ் மற்றும் பிரேசில் தேசிய அணியுடன் விளையாட்டின் மிகச் சிறந்த வீரராக திகழ்ந்து, அதிக அளவிலான ரசிகர்களை ஈர்த்தவர். பீலே சிறிது காலமாக புற்றுநோயுடன் போராடி வந்தார். சமீபத்தில், அவரது புற்றுநோய்க்கான மருந்துகளை ஒழுங்குபடுத்துவதற்காக மருத்துவமனையில் […]

You May Like