fbpx

தனி கல்விக் கொள்கை பற்றி செப்டம்பர் 15-க்குள் கருத்து தெரிவிக்க வேண்டும்…! குழுவின் தலைவர் அறிவிப்பு…!

தமிழகத்திற்கான தனி கல்விக் கொள்கை குறித்த கருத்துக்களை செப்டம்பர் 15-ம் தேதிக்குள் குழுவிற்கு தெரிவிக்கலாம்

இதுகுறித்து மாநில கல்விக் கொள்கை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்ட உயர்மட்ட குழுவின் தலைவர் முருகேசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழகத்திற்கான தனித்துவமான மாநில கல்விக் கொள்கை உருவாக்கிட உரிய நடவடிக்கையில் மேற்கொள்ளும் பொருட்டு அனைத்து தரப்பினரிடம் இருந்து கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் பெறுவதற்கு உயர்மட்ட குழுவால் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் பொதுமக்கள், கல்வியாளர்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், தனியார் கல்வி நிறுவனத்தைச் சார்ந்தவர்கள் ஆகியோரிடம் இருந்து கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன.மேற்படி கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை செப்டம்பர் 15-ம் தேதிக்குள் stateeducationpolicy@gmail.com என்ற மின்னஞ்சலுக்கும், center for excellence building, 3-வது தளம், களஞ்சியம் கட்டடம் பின்புறம் அண்ணா பல்கலைக்கழகம் சென்னை 600025 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.மேலும் திருநெல்வேலி, மதுரை, திருச்சி, தஞ்சாவூர், கோயம்புத்தூர், சேலம், வேலூர், சென்னை ஆகிய எட்டு இடங்களில் மண்டல அளவில் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

இலவச வீட்டு மனை பட்டா உள்ளிட்ட திட்டம்... இன்று காலை 10 மணி முதல்‌ மதியம்‌ 2 மணி வரை மட்டுமே...! ஆட்சியர் அறிவிப்பு...!

Sat Jul 16 , 2022
மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து தர்மபுரி மாவட்ட ஆட்சித்தலைவர்‌ சாந்தி தனது செய்தி குறிப்பில்;  தருமபுரி மாவட்டத்தில்‌ உள்ள மாற்றுத்‌ திறனாளிகள்‌ நலத்திட்டங்கள்‌ மற்றும்‌ உதவி உபகரணங்கள்‌ பெறுவதற்காக மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ முகாம்‌ மாவட்டம்‌ முழுவதும்‌ நடைபெறவுள்ளது. காரிமங்கலம்‌ ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகள்‌ பயன்பெறும்‌ வகையில்‌ காரிமங்கலம்‌ அரசு ஆண்கள்‌ மேல்நிலைப்பள்ளியில்‌ வருகின்ற இன்று காலை 10.00 மணி முதல்‌ மதியம்‌ 2 மணி வரை […]

You May Like