fbpx

போக்குவரத்திற்கும்‌ இடையூராக செய்தால் ரூ.10,000 அபராதம்…! ஆட்சியர் அதிரடி உத்தரவு…!

தெருக்கள்‌ மற்றும்‌ சாலைகளில்‌ மாடுகள் சுற்றி திரிந்தால் அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி பகுதிகளில்‌ பொது மக்களுக்கும்‌, போக்குவரத்திற்கும்‌ இடையூராக தெருக்கள்‌ மற்றும்‌ சாலைகளில்‌ சுற்றித்திரியும்‌ மாடுகளால்‌ பொதுமக்களிடமிருந்து பல்வேறு புகார்கள்‌ தொடர்ந்து வந்த வண்ணம்‌ உள்ளது. இதை தடுக்கும்‌ பொருட்டு தெரு மற்றும்‌ சாலைகளில்‌ சுற்றி திரியும்‌ கால்நடைகளை பிடிக்கும்‌ பணியானது மாநகராட்சி வாகனம்‌ மூலம்‌ மேற்கொள்ளப்படுகிறது.

முதல்‌ தடவை பிடிபட்ட மாட்டின்‌ உரிமையாளர்‌ ரூ.10,000/- அபராதம்‌ செலுத்தி மாட்டை பிடித்துச்‌ செல்ல வேண்டும்‌. அபராதம்‌ செலுத்த தவறும்‌ பட்சத்தில்‌ பிடிபட்ட மாடுகள்‌ மாநகராட்சி மூலம்‌ ஏலம்‌ விடப்பட்டு அத்தொகை மாநகராட்சி கருவூலத்தில்‌ செலுத்தப்படும்‌.

மேலும்‌, பிடிபட்ட மாடுகள்‌ மீண்டும்‌ தெருக்கள்‌ மற்றும்‌ சாலைகளில்‌ சுற்றினால்‌ மாட்டின்‌ உரிமையாளர்‌ மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, குற்றவியல்‌ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்‌ என மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப் உத்தரவிட்டார்.

Vignesh

Next Post

ஐயோ..! அதிகரிக்கும் கொரோனா...! தடுப்பூசி கட்டாயம் செலுத்த வேண்டும்...! அமைச்சர் முக்கிய தகவல்....!

Thu Dec 22 , 2022
சீனா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் பிரேசில் உள்ளிட்ட உலகின் பல்வேறு பகுதிகளில் கொரோனா வழக்குகள் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், கர்நாடக சுகாதார அமைச்சர் சுதாகர், மாநிலத்தில் அரசு புதிய கொரோனா வழிகாட்டுதல்களை வெளியிடும் என்று தெரிவித்துள்ளார். சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட சில நாடுகளில் கொரோனா வழக்குகள் திடீரென அதிகரித்து வருகின்றன. சீனாவில் மக்கள் அதிக அளவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் வீடியோ இணையதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. எனவே பூஸ்டர் […]
அச்சுறுத்தும் புதிய வகை கொரோனா..!! இந்த அறிகுறிகள் உங்களுக்கும் இருக்கா..? உடனே இதை பண்ணுங்க..!!

You May Like