fbpx

Parliament Monsoon Session | ’நம்பிக்கையில்லா தீர்மானம் நல்வாய்ப்பாக அமைந்துள்ளது’..!! பிரதமர் மோடி பதில் உரை..!!

மக்களவையில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது பிரதமர் மோடி பதிலுரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் கருத்தையும் கேட்டறிந்தேன். எதிர்க்கட்சிகள் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் எனக்கு நல்வாய்ப்பாக அமைந்துள்ளது. 5 ஆண்டுகளுக்கு முன்னரே நம்பிக்கையில்லா தீர்மானத்தை நான் எதிர்பார்த்தேன். மக்கள் எங்கள் ஆட்சியின் மீது நம்பிக்கையை வைத்துள்ளனர். மக்களவையில் 3 நாட்களாக விவாதங்களை கவனித்து வருகிறேன். இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை கடவுளின் ஆசீர்வாதமாக கருதுகிறேன். நாட்டின் கோடிக்கணக்கான மக்களுக்கு எனது நன்றியை தெரிவிக்க நான் இங்கு வந்துள்ளேன்” என்றார்.

2024இல் மிகப்பெரிய வெற்றி…

கடந்த தேர்தலில் மக்கள் எதிர்க்கட்சிகள் மீது நம்பிக்கையில்லை என்று அறிவித்துவிட்டனர். 2024 தேர்தலில் பாஜகவும் தேசிய ஜனநாயக கூட்டணியும் அனைத்து சாதனைகளையும் முறியடிக்கும். தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும்.

முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றம்…

பாஜக ஆட்சியில் முக்கிய பல மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. முக்கிய மசோதாக்களை கொண்டு வரும்போதெல்லாம் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன. இளைஞர்களைப் பற்றி எதிர்க்கட்சிகளுக்கு கவலை இல்லை. வாக்களித்த மக்களுக்கு எதிர்க்கட்சிகள் துரோகம் செய்துவிட்டது.

எதிர்கட்சிக்கு அக்கறை இல்லை…

கட்சி நலனையே எதிர்க்கட்சிகள் பெரிதாக கருதுகின்றன. நாட்டின் நலன் மீது அக்கறை இல்லை என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். ஊழல் கட்சிகளின் கூட்டணிதான் தற்போது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளதாக கூறினார்.

நோ பாலாக வீசும் எதிர்க்கட்சிகள்; சதமடிக்கும் ஆளுங்கட்சி…

அரசியலில் எதிர்க்கட்சிகள் பீல்டிங்கில் இருக்கின்றன. ஆளும் கட்சி சிக்ஸர்களாக அடிக்கின்றது. எதிர்க்கட்சிகள் நோ பாலாக வீசுகின்றன. ஆளுங்கட்சி சதம் அடித்துக் கொண்டிருக்கிறது. நம்பிக்கையில்லா தீர்மானம் பற்றி பேசுபவர்களின் பட்டியலில் ராகுல் பெயர் இடம்பெற்றிருக்கவில்லை. எதிர்க்கட்சிகள் இன்னும் தங்களை நன்றாக தயார்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். எதிர்க்கட்சிகள் தங்களை தயார்படுத்திக் கொள்ள 5 ஆண்டுகளை அழித்திருக்கின்றன.

வாய்ப்பளிக்காத காங்கிரஸ்…

ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசுவதற்கு காங்கிரஸ் வாய்ப்பு தரவில்லை என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டினார். எல்லா நேரமும் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியை அவமானப்படுத்துவதே காங்கிரஸின் வேலையாக உள்ளது என்றும் தெரிவித்தார்.

Chella

Next Post

"குறுக்க இந்த கௌஷிக் வேற" சிவகார்த்திகேயனை கலாய்த்த பிரபலம்..!

Thu Aug 10 , 2023
ஜெயிலர் பட ரிலீசுக்கு படக்குழுவினர் பிஸியாக இருக்கிறார்களோ இல்லையோ, ஆனால் பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் ரொம்ப பிஸியாவே இருக்கிறார். ஒரு பக்கம் ராஜினி ரசிகர்களின் மிரட்டல் ஆடியோ. மறுபக்கம் ஜெயிலர் விமர்சனத்தில் என்னவெல்லாம் சொல்ல போகிறார் என்று ஆர்வத்துக்கு பஞ்சமில்லால் கன்டென்ட்களை கொடுத்து வருகிறார். ஒரு கட்டத்தில் மிரட்டல் விடுத்த ரஜினி ரசிகர்களுக்கு மாயாஜால் தியேட்டரில் தான் படம் பாக்க போறேன் என நக்கல் அடித்தார். […]

You May Like