fbpx

கைது செய்யப்பட்ட பாஜகவின் ஆதரவாளர் உமா கார்கியிடம் காவல்துறையினர் அதிரடி விசாரணை…..! விடுதலை செய்யப்படுவாரா….?

கோவை சிங்காநல்லூரை சேர்ந்தவர் உமா கார்கி(56) இவர் பாஜக ஆதரவாளர் மேலும் இவர் சமூக வலைதளங்களில் பாஜகவிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வந்தார்.

மேலும் சமீபத்தில் கோவையில் பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றபோது இவர் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலையிடம் சிறந்த செயல்பாட்டாளர் என்று விருது பெற்றார்.

இந்த நிலையில் தான் இவர் சமூக வலைதளங்களில் தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, தந்தை பெரியார் போன்ற தலைவர்கள் தொடர்பாக அவதூறான கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக கோவை வடக்கு மாவட்ட திமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி ஹரிஷ் என்பவர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் வழங்கினார்.

அதன் அடிப்படையில், உமா கார்கியின் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கடந்த 20ஆம் தேதி அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன் பிறகு அவரை 2 நாள் காவலில் எடுத்து சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதன் பின்னர் மீண்டும் அவர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு விட்டார்.

இந்த நிலையில் தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த உமா கார்க்கியிடம் சென்னை பெருநகர காவல் துறையினர் நேற்று முன்தினம் இரவு விசாரணை மேற்கொண்டனர். தங்களிடம் வந்த புகார் குறித்து விசாரணை நடத்திய பிறகு அவரை நேற்று காவல்துறையினர் சென்னைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

Next Post

ரத்த களமாக மாறிய திருமண வீடு..!! புதுமண தம்பதி உள்பட 6 பேர் அடுத்தடுத்து கொலை..!! அதிர்ச்சி பின்னணி..!!

Sun Jun 25 , 2023
உத்தரப்பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் கோகுல்பூர் அர்சரா கிராமத்தைச் சேர்ந்தவர் சுபாஷ் சந்திர யாதவ். இவருக்கு ஷிவ்வீர், சோனு மற்றும் புல்லன் ஆகிய 3 மகன்கள் உள்ளனர். இந்நிலையில், கடந்த ஜூன் 23ஆம் தேதி 2வது மகன் சோனுவின் திருமணம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மணமக்கள் உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோர் திருமண ஊர்வலம் சென்றுள்ளனர். எட்டாவாவில் […]

You May Like