fbpx

அழுகிய சடலமாக மீட்கப்பட்ட தாய் தந்தை மகன்.! விசாரணையில் வெளியான அதிர்ச்சி சம்பவம் .! ஒருவர் கைது.!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் விவசாய நிலத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நபரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள காடியார் கிராமத்தில் விவசாய நிலத்தில் அழுகிய நிலையில் மூன்று சடலங்கள் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் இறந்த உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் காவல்துறை நடத்திய முதல் கட்ட விசாரணையில் இறந்த நபர்கள் ராதா கிருஷ்ணன் அன்னபூரணி மற்றும் அவர்களது மகன் சந்தோஷ்குமார் என்பது தெரிய வந்தது.

மேலும் பிரேத பரிசோதனை அறிக்கையில் இறந்த நபர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து பக்கத்து நிலத்தில் சட்ட விரோதமாக மின்சார வேலி அமைத்திருந்த ராமமூர்த்தி என்பவரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது ராமமூர்த்தி நிலத்தில் உள்ள மின்சார வேலியில் சிக்கி 3 பேரும் உயிரிழந்திருக்கலாம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Next Post

யார் வீட்டு காசையும் கேட்கல.! எங்க காசு குடுங்க.! மத்திய அமைச்சருக்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி.!

Sat Dec 23 , 2023
இந்த மாதம் தொடக்கம் முதலே தமிழகத்தில் பெய்து வரும் கனமழையால் மாநிலத்தின் பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி இருக்கிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு சென்னை உட்பட நான்கு மாவட்டங்களில் பெய்த கன மழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த வாரம் திருநெல்வேலி தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பெய்த கடும் மழையின் காரணமாக தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்கள் கடும் […]

You May Like