fbpx

திருச்சி : கணவன் கொலையில் கர்ப்பிணி மனைவி கைது.! கள்ளக்காதலுடன் தீட்டிய சதித்திட்டம்.!

திருச்சி அருகே கள்ள உறவுக்கு இடையூறாக இருந்த கணவன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவரது கர்ப்பிணி மனைவி கள்ளக்காதலன் மற்றும் கூலிப்படையை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான காவல்துறையின் விசாரணையை தொடர்ந்து பல உண்மை சம்பவங்கள் வெளியாகி இருக்கிறது.

திருச்சி மாவட்டம் பெருகமணி பகுதியைச் சேர்ந்தவர் வடிவேலு(47). இவருக்கு திருமணம் ஆகி பானுமதி(38) என்ற மனைவியும் மூன்று வயதில் குழந்தை ஒன்றும் இருக்கிறது. லாரி டிரைவராக பணியாற்றி வந்த வடிவேல் டிரைவர் பணியை விட்டுவிட்டு கரூரில் உள்ள துணிக்கடையில் வேலை செய்து வந்தார். நிலையில் அவரது மனைவி இரண்டாவதாக கர்ப்பமானதால் கரூரில் இருக்கும் தாய் வீட்டில் வசித்து வந்திருக்கிறார்.

இதனால் வடிவேல் மட்டும் அவரது வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஜனவரி இரண்டாம் தேதி வடிவேலுவின் வீடு நீண்ட நேரம் பூட்டப்பட்டிருந்திருக்கிறது. ஆள் நடமாட்டம் இல்லாததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரது வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்திருக்கிறார் வடிவேல். இதனைத் தொடர்ந்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

வடிவேலின் தலை பின்புறத்தில் காயம் இருந்ததால் காவல்துறையினர் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என சந்தேகித்தனர். இதனைத் தொடர்ந்து வடிவேலின் மனைவி பானுமதி இடம் விசாரணை செய்ததில் அவர் முன்னுக்கு பின்னான தகவல்களை வெளியிட்டு இருக்கிறார். இதனைத் தொடர்ந்து அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருக்கிறது. பானுமதி குளித்தலையைச் சேர்ந்த கருப்பசாமி(33) என்பவருடன் தகாத உறவில் இருந்து இருக்கிறார். இதனைப் பற்றி அறிந்த வடிவேல் இருவரையும் கண்டித்துள்ளார். இதனால் கூலிப்படையை ஏவி வடிவேல் கொலை செய்யப்பட்டு இருக்கிறார். இதனைத் தொடர்ந்து வடிவேலின் மனைவி பானுமதி அவரது கள்ளக்காதலன் கருப்புசாமி மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த சிராஜுதீன் மற்றும் அருண் ஆகிய நான்கு பேரையும் காவல்துறை கைது செய்துள்ளது.

Next Post

’உனக்கு டெய்லியும் இதே வேலையா போச்சு’..!! ’இதுக்கு ஒரு முடிவு கட்டுறேன்’..!! சம்பவம் செய்த மனைவி..!!

Mon Jan 8 , 2024
தினமும் குடித்துவிட்டு வந்து ஓயாமல் டார்ச்சர் செய்த கணவரை மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் வைகுண்டபுரம் 2-வது தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (44). இவர், சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் காவலாளியாக பணியாற்றி வந்துள்ளார். இவரது மனைவி கனகவல்லி (34). இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், குடிப்பழக்கத்திற்கு அடிமையான பாலகிருஷ்ணன், தினமும் குடித்துவிட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். வழக்கம் போல் சம்பவத்தன்றும் […]

You May Like