fbpx

திருப்பத்தூரில் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல். பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமரின் நிவாரண நிதி அறிவிப்பு…!

திருப்பத்தூரில் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமரின் நிவாரண நிதி அறிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டை அடுத்த ஓணான்குட்டை கிராமத்தைச் சேர்ந்த 24 நபர்கள் கடந்த 8 அன்று தனியார் சுற்றுலா மினி பேருந்து மூலம் பெங்களூருக்கு சுற்றுலா சென்றுவிட்டு நேற்று சொந்த ஊர் திரும்பி வரும் பொழுது திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சண்டியூர் என்ற இடத்தில் வாகன பழுது காரணத்தினால் தேசிய நெடுஞ்சாலை சென்டர் மீடியன் ஓரத்தில் நிறுத்தி சரி செய்து கொண்டுருந்தனர். சாலையில் பழுதாகி நின்ற வேன் மீது லாரி மோதிய விபத்தில், ஒரே கிராமத்தைச் சேர்ந்த 7 பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் திருப்பத்தூரில் நேரிட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்த நபர்களுக்கு ரூ.50,000மும் வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார். அதே போல தமிழக அரசு சார்பில் குடும்பத்தினருக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

18000 ரூபாய் சம்பளத்தில் ஈரோடு சமூக நலத்துறையில் காத்திருக்கும் வேலை வாய்ப்பு....!

Tue Sep 12 , 2023
ஈரோடு சமூக நலத்துறை சார்பாக வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பில் multipurpose assistant,IT administrator போன்ற பணிகளுக்கு, 5 காலி பணியிடங்கள் இருப்பதாகவும், இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய தேவைப்படும் முழுமையான விவரங்களையும் இங்கே வழங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு விண்ணப்பம் செய்யும் விண்ணப்பதாரர்களின் வயது 56 என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இதற்கு பதிவு செய்யு விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில், B.Sc,Btech,BE, literate […]

You May Like