fbpx

15 தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கி உத்தரவு…! உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும்…!

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரிந்து வந்த 15 தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு வழங்கி உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வித்துறை செயலாளர் உஷா வெளியிட்டுள்ள அறிவிப்பில்; தமிழ்நாடு பள்ளிக்‌ கல்விப்‌ பணி கீழ்‌ வகுப்பு IV-ஐ சார்ந்த மாவட்டக்‌ கல்வி அலுவலர்‌ மற்றும்‌ அதனையொத்த பணியிடங்களுக்கு, கீழ்‌ குறிப்பிட்டுள்ள அரசு உயர்நிலைப்‌ பள்ளித்‌ தலைமை ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ (பணிவிதிகள்‌) சட்டம்‌ 2016, பிரிவு 471) -இன்‌ கீழ்‌ தற்காலிக அடிப்படையில்‌, அவர்கள்‌ பணி ஏற்கும்‌ நாள்‌ முதல்‌ மாவட்டக்‌ கல்வி அலுவலர்‌ மற்றும்‌ அதனையொத்த பணி நிலையில்‌ உள்ள பதவிகளுக்கு பதவி உயர்வு அளித்தும்‌, மேல்நிலைப்‌ பள்ளித்‌ தலைமை ஆசிரியர்களுக்கு, தமிழ்நாடு பள்ளிக்‌ கல்விப்‌ பணி விதி 2 (6) III-ன்‌ கீழ்‌ மாவட்டக்‌ கல்வி அலுவலர்‌ மற்றும்‌ அதனையொத்த பணி நிலையில்‌ உள்ள பதவிகளுக்கு பணி மாறுதலில்‌ நியமனம்‌ வழங்கி ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

பதவி உயர்வு / பணிமாறுதல்‌ ஆணை வழங்கப்பட்ட கீழ்க்காணும்‌ தலைமையாசிரியர்களுக்கு அவர்களது பெயர்களுக்கு எதிரே குறிப்பிடப்பட்டுள்ள பணியிடத்தில்‌ நியமனம்‌ செய்து ஆணை வழங்கப்படுகிறது. இப்பணியிடத்தில்‌ உடன்‌ பணியேற்கும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

குங்குமப்பூ உடலுக்கு நல்லதா.. கெட்டதா..!

Sun Jan 8 , 2023
குங்குமப்பூவானது கற்பிணி பெண்கள் மட்டும் அல்ல எல்லோருமே சேர்த்து கொள்ளலாம். இதனுடைய மருத்துவ குணங்கள் மற்றும் அதை சாப்பிட்டால் நமக்கு கிடைக்கும் பலன்கள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். குங்குமப்பூவில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் குரோசின் நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. ஒரு கப் பாலில் சிறிது குங்குமப்பூ சேர்த்து குடித்து வந்தால், நமது ஆரோக்கியத்திற்கு பல நன்மைகள் கிடைக்கும். பால் மற்றும் குங்குமப்பூ […]

You May Like