தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரிந்து வந்த 15 தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு வழங்கி உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வித்துறை செயலாளர் உஷா வெளியிட்டுள்ள அறிவிப்பில்; தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி கீழ் வகுப்பு IV-ஐ சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களுக்கு, கீழ் குறிப்பிட்டுள்ள அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் (பணிவிதிகள்) சட்டம் 2016, பிரிவு 471) -இன் கீழ் தற்காலிக அடிப்படையில், அவர்கள் பணி ஏற்கும் நாள் முதல் மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணி நிலையில் உள்ள பதவிகளுக்கு பதவி உயர்வு அளித்தும், மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு, தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி விதி 2 (6) III-ன் கீழ் மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணி நிலையில் உள்ள பதவிகளுக்கு பணி மாறுதலில் நியமனம் வழங்கி ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
பதவி உயர்வு / பணிமாறுதல் ஆணை வழங்கப்பட்ட கீழ்க்காணும் தலைமையாசிரியர்களுக்கு அவர்களது பெயர்களுக்கு எதிரே குறிப்பிடப்பட்டுள்ள பணியிடத்தில் நியமனம் செய்து ஆணை வழங்கப்படுகிறது. இப்பணியிடத்தில் உடன் பணியேற்கும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.