fbpx

ராணி எலிசபெத் மறைவு..! இந்தியாவில் நாளை மறுநாள்..! மத்திய அரசு முக்கிய அறிவிப்பு..!

இங்கிலாந்து ராணி மறைவை அடுத்து, நாளை மறுநாள் அரசுமுறை துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இங்கிலாந்து ராணியாக 70 ஆண்டு காலம் பதவி வகித்தவர் இரண்டாம் எலிசபெத். உடல்நலக்கோளாறுகளால் அவதிப்பட்டு வந்த இவர், ஊன்றுகோல் உதவியுடனே நடமாடினார். இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்துக்கு நேற்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, மகாராணியின் அதிகாரப்பூர்வ மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மகாராணி எலிசபெத் நேற்று உயிரிழந்தார். அவருக்கு வயது 96 ஆகும். இங்கிலாந்து மகாராணி எலிசபெத் மறைவுக்கு இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ராணி எலிசபெத் மறைவு..! இந்தியாவில் நாளை மறுநாள்..! மத்திய அரசு முக்கிய அறிவிப்பு..!

இந்நிலையில், இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் மறைவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக நாளை மறுநாள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அரசுமுறை துக்கம் அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு நாளை மறுநாள் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

Chella

Next Post

கள்ளக் காதலனுடன் சேர்ந்து... கணவனை மண்வெட்டியால் வெட்டி கொலை செய்த மனைவி..!

Fri Sep 9 , 2022
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அருக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரவி (52). இவருடைய மனைவி பாண்டியம்மாள்(45). இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பல வருடங்களாக பிரிந்து வாழ்ந்தனர். திருப்பூரில் கூலித்தொழிலாளியாக ரவி வேலை செய்து வந்தார். தனியாக வசித்து வந்த பாண்டியம்மாள் மேலூரில் பூ கடை வைத்திருந்தார். இந்தநிலையில் சில நாட்களுக்கு முன் அருக்கம்பட்டியில் கோவில் திருவிழா நடந்தது. திருவிழாவிற்கு வந்த ரவி அருக்கம்பட்டியில் நேற்று முன்தினம் […]
பைக்கில் சென்ற இளைஞரை சரமாரியாக வெட்டி தலையை மட்டும் எடுத்துச் சென்ற மர்ம கும்பல்..!! அதிரவைக்கும் சம்பவம்..!!

You May Like