ராஜஸ்தான் மாநிலம் பில்வாராவில் 14 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாலியல் பலாத்காரம் மற்றும் இதர பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்களை அரசு வேலைகளில் இருந்து தடை செய்ய ராஜஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது என்று முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்வீட்டில், பாலியல் பலாத்காரம் போன்ற குற்றங்களை ஈடுபடும் நபர்களின் விவரம் காவல் நிலையங்களில் பராமரிக்கப்படும், மேலும் அது அரசாங்க வேலைகளுக்குத் தேவையான சான்றிதழிலும் குறிப்பிடப்படும். பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட குற்றவாளிகள் மற்றும் சிறுமிகள் மற்றும் பெண்களைத் துன்புறுத்துபவர்கள் அரசு வேலைகளில் இருந்து தடை செய்யப்படுவார்கள்” என்று மாநில அரசு முடிவு செய்துள்ளது, முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறினார்.
மேலும், பாலியல் குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் பதிவும் காவல் நிலையங்களில் பராமரிக்கப்படும் என்றும், இது மாநில அரசு அல்லது காவல்துறையால் வழங்கப்படும் சான்றிதழில் குறிப்பிடப்படும் என்றும் முதல்வர் கூறினார். “இதுபோன்ற சமூக விரோத சக்திகளை சமூக புறக்கணிப்பது அவசியம்” என்று ட்வீட் செய்துள்ளார்.