fbpx

அரசு பணிக்கு தடையாக இருந்த பெண் குழந்தை.. பெற்றோரின் விபரீத செயலால் பரபரப்பு.!

ராஜஸ்தான் மாநிலத்தில் ஜான்வர்லால் என்ற நபர் கிராம அரசுப் பள்ளியில் உதவியாளராக பணியாற்றி வந்திருக்கிறார். ஒப்பந்த அடிப்படையில் அரசு பள்ளியில் பணியாற்றி வந்த இவர் தன்னுடைய பணி எப்போது நிரந்தரமாகும் என்று காத்திருந்துள்ளார்.

இவருக்கு கீதா தேவி என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருந்துள்ளனர். சமீபத்தில் அவர்களுக்கு மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்து இருக்கிறது. மாநில அரசின் விதிமுறைகளின் படி பணியாளர்கள் இரு குழந்தைகளை மட்டும் தான் பெற்றுக்கொள்ள வேண்டும்.

ஒருவேளை மூன்றாவது குழந்தை பிறந்தால் அவர்களுக்கு கட்டாயமாக பணி ஓய்வு அளிக்கப்படும். எனவே, ஜான்வர்லால் தனது வேலையை காப்பாற்றிக் கொள்ள தடையாக இருக்கும் அந்த குழந்தையை கொல்ல முடிவு செய்துள்ளார். அதன்படி 5 மாத குழந்தையை அவரும் அவரது மனைவியும் கால்வாயில் தூக்கி வீசி கொலை செய்துள்ளனர்

இதில் மூழ்கி அந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இந்த விஷயம் போலீசாருக்கு தெரிய வர அவர்கள் ஜான்வர்லால் மற்றும் கீதா தேவி இருவரையும் கைது செய்துள்ளனர். அரசு வேலைக்கு ஆசைப்பட்டு பெற்ற குழந்தையையே கொலை செய்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Baskar

Next Post

நீதிமன்ற வளாகத்தில் அப்படி ஒரு காரணத்திற்காக மகளை சுட்டுக்கொன்ற தந்தை.!

Wed Jan 25 , 2023
பாகிஸ்தான் நாட்டில் ஒரு இளம் பெண் வசித்து வந்த நிலையில், அவர் கராச்சி நகரை சேர்ந்த ஒரு டாக்டரை காதலித்து வந்துள்ளார். இதற்கு அந்த பெண்ணின் குடும்பம் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. எனவே, அந்த பெண் வீட்டை விட்டு வெளியேறி தனது காதலரை திருமணம் செய்து கொண்டார். இதன் பின் இருவரும் சேர்ந்து கராச்சியில் வாழ்ந்து வந்த நிலையில் பெண்ணின் தந்தை தனது மகளை காணவில்லை என்று போலீசில் புகார் […]

You May Like