fbpx

பிரபலமான ஷாப்பிங் மாலில் மருத்துவர் தற்கொலை! நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்!

ஓய்வு பெற்ற மருத்துவர் ஒருவர் பிரபலமான ஷாப்பிங் மால் ஒன்றில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தைச் சார்ந்த ஓய்வு பெற்ற மருத்துவர் மன்மோகன் சோனி. இவர் தான் அந்த மாலில் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. ஆட்கள் நடமாட்டம் மிகுந்த வணிக வளாகத்தில் மருத்துவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

மத்திய பிரதேசம் மாநிலத்தின் தலைநகரான இந்தூரில் அமைந்திருக்கிறது C21 ஷாப்பிங் மால். இது இந்த ஊரில் உள்ள விஜயநகர் பகுதியில் அமைந்திருக்கக் கூடிய பரபரப்பான வணிக வளாகம் ஆகும். இந்த வணிக வளாகத்தில் தான் திங்கள் கிழமை மதியம் மருத்துவர் மன்மோகன் சோனி தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவர் இந்த வணிக வளாகத்தின் இரண்டாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இரண்டாவது தளத்திலிருந்து குதித்து காயமடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த காவல்துறையினர் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை செய்து வருகின்றனர். ஓய்வு பெற்ற மருத்துவர் இரண்டாவது வளாகத்தில் இருந்து குதித்த காட்சிகள் வணிக வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசி டிவியில் படமாகியுள்ளன.

Baskar

Next Post

வாய்மொழி சாட்சியத்தின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்கப்படுவது நிலையானதாக இருக்காது! சுப்ரீம் கோர்ட்!

Fri Mar 17 , 2023
வழக்கில் ஒன்றில் போதுமான ஆதாரங்கள் இல்லாமல் வாய்மொழி சாட்சியத்தின் அடிப்படையில் மட்டும், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்கப்படுவது நிலையானதாக இருக்காது என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. கொலைக் குற்ற வழக்குகளில் தொடர்புடைய மூன்று பேருக்கு சத்தீஸ்கர் நீதிமன்றம் ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பு அளித்திருந்தது. இதனை எதிர்த்து 3 பேர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி விக்ரம் நாத், நீதிபதி சஞ்சய் கரோல் ஆகியோர் […]

You May Like