திருச்சி மாநகர பகுதியில் உள்ள மேலகல்கண்டார் கோட்டையில் இளவரசன்(30) என்பவர் வசித்து வருகிறார். இவர் மீது புதுச்சேரியில் துணை சபாநாயகரை கொல்ல முயன்ற வழக்கு உள்பட கொலை மிரட்டல், கொலை முயற்சி, திருட்டு போன்ற பல வழக்குகள் குவிந்து இருக்கின்றன.
இன்றைய தினத்தில் ஒரு வழக்கிற்காக புதுக்கோட்டை கோர்ட்டில் ஆஜராக இளவரசன் வந்துள்ளார். இதனிடையில் கோர்ட் அருகே வந்தபோது அங்கு வந்த சில நபர்கள் கொண்ட மர்ம கும்பல், இளசரசனை சுற்றி வளைத்து வெட்டிக்கொலை செய்துள்ளது.
இதனை தொடர்ந்து கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மோப்ப நாய்களின் உதவியுடன் குற்றவாளிகளை தேடுவதில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
மேலும் இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், ரவுடி இளவரசன் உடன் வந்த இரண்டு நபர்களிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.