கோவை ஜிஎஸ்டி இயக்குனரக நுண்ணறிவு பிரிவு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கோவையில் போலி ரசீது தயார் செய்து வரியைப்பு செய்தது குறித்து தொழிலதிபர் ஒருவரின் வீடு மற்றும் வணிக நிறுவன வளாகங்களில் கடந்த 15 ஆம் தேதி ஜி எஸ் டி இயக்குனராக நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை மற்றும் விசாரணையை நடத்தினர் என்று கூறப்பட்டுள்ளது.
இதில் 98 கோடி ரூபாய் மதிப்பில் போலி ரசீது தயார் செய்து ஜிஎஸ்டி அலுவலகத்தை ஏமாற்றி 13 கோடி ரூபாய் இன்புட் டேக்ஸ் கிரெடிட் என்ற முறையில் பணம் பெற்றது தெரியவந்துள்ளது. இவரது செயலால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த தவறை அவரே ஒப்புக் கொண்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அதிகாரிகள் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். போலியான ரசீதில் தெரிவிக்கப்பட்டிருக்கின்ற தொழில் நிறுவனங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு கோவை ஜிஎஸ்டி இயக்குனராக நுண்ணறிவு பிரிவு அலுவலகம் தெரிவித்திருக்கிறது.