கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள விற்பனையாளர்கள் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு வரும் 12 முதல் 22ம் தேதி வரை நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது. இதனால், மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன் படி, அரசு உதவி மருத்துவர் நிலைக்குக் குறையாத மருத்துவரிடம் உடல் தகுதிச் சான்றிதழைப் பெற்று சம்மந்தப்பட்ட கூட்டுறவு நிறுவனத்தில் பணியில் சேரும் போது சமர்ப்பிக்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள் தங்களது உரிமை கோரலுக்கு ஆதாரமாக தமிழக அரசின் மாவட்ட மாற்றுத் திறனாளி நல அலுவலரால் வழங்கப்பட்ட உதவிகள் பதிவு புத்தகம், தகுதி வாய்ந்த அரசு மருத்துவரால் வழங்கப்பட்ட மாற்றுத் திறனாளி சான்றிதழ், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும். எனவே திருத்தப்பட்ட நெறிமுறைப்படி ஏதேனும் ஒரு சான்றிதழுடன் மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வில் அனுமதிக்கப்படுவர். இந்த செய்தி விழுப்புரம் உள்ளவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.