fbpx

வரும் 12 முதல் 22ம் தேதி வரை மட்டுமே…! உடனே இந்த சான்றிதழ் வாங்க வேண்டும்…!

கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள விற்பனையாளர்கள் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு வரும் 12 முதல் 22ம் தேதி வரை நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது. இதனால், மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன் படி, அரசு உதவி மருத்துவர் நிலைக்குக் குறையாத மருத்துவரிடம் உடல் தகுதிச் சான்றிதழைப் பெற்று சம்மந்தப்பட்ட கூட்டுறவு நிறுவனத்தில் பணியில் சேரும் போது சமர்ப்பிக்க வேண்டும்.

மாற்றுத்திறனாளிகள் தங்களது உரிமை கோரலுக்கு ஆதாரமாக தமிழக அரசின் மாவட்ட மாற்றுத் திறனாளி நல அலுவலரால் வழங்கப்பட்ட உதவிகள் பதிவு புத்தகம், தகுதி வாய்ந்த அரசு மருத்துவரால் வழங்கப்பட்ட மாற்றுத் திறனாளி சான்றிதழ், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும். எனவே திருத்தப்பட்ட நெறிமுறைப்படி ஏதேனும் ஒரு சான்றிதழுடன் மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வில் அனுமதிக்கப்படுவர். இந்த செய்தி விழுப்புரம் உள்ளவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

Vignesh

Next Post

13,811 பேருக்கு கொரோனா தொற்று!!! மீண்டு சீனாவை தாக்கும் கொரோனா..?

Sun Dec 11 , 2022
சீனாவில் கண்டறியப்பட்டதாக கூறப்படும் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது. தற்போது கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் படிப்படையாக இந்த தொற்றில் இருந்து மீண்டு வருகின்றன. இந்நிலையில் சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தது. நேற்று முன்தினம் அங்கு 16,797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், சீனாவின் உள்ளூர் […]

You May Like