fbpx

மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் தளர்வு மனு : CBI, அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்..!!

டெல்லி கலால் கொள்கை தொடர்பான ஊழல் மற்றும் பணமோசடி வழக்குகளில் விசாரணை அதிகாரியிடம் ஒவ்வொரு திங்கள் மற்றும் வியாழன் கிழமைகளிலும் ஆஜராக வேண்டும் என்ற ஜாமீன் நிபந்தனையை தளர்த்தக் கோரிய ஆம் ஆத்மி கட்சித் தலைவர் மணீஷ் சிசோடியாவின் மனுக்களை விசாரிக்க உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஒப்புக்கொண்டது.

நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு, சிசோடியாவின் விண்ணப்பங்கள் மீது பதில் அளிக்குமாறு மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) மற்றும் அமலாக்க இயக்குநரகம் (இடி) ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்பியது. ஆகஸ்ட் 9 அன்று, உச்ச நீதிமன்றம் அவருக்கு டெல்லி கலால் கொள்கை ஊழலுடன் தொடர்புடைய ஊழல் மற்றும் பணமோசடி வழக்குகளில் ஜாமீன் வழங்கியது, விசாரணையின்றி 17 மாதங்கள் நீண்ட சிறைவாசம் அவரை விரைவான விசாரணைக்கான உரிமையைப் பறித்ததாகக் கூறியது.

விசாரணை அதிகாரியிடம் திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் காலை 10-11 மணிக்குள் ஆஜராக வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை உச்ச நீதிமன்றம் விதித்துள்ளது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது, சிசோடியா சார்பின் ஆஜரான மூத்த வழக்குரைஞர் அபிஷேக் சிங்வி, ஆம் ஆத்மி கட்சி தலைவர் விசாரணை அதிகாரிகள் முன்பு 60 முறை ஆஜராகியுள்ளார் என்று தெரிவித்தார். இதையடுத்து சிசோடியாவின் பிணை நிபந்தனையை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ள நிலையுல், இதுதொடர்பாக பெஞ்ச் அடுத்த தேதியில் பதிலளிக்கும் என்று கூறியுள்ளது.

Read more ; அதிமுக நிர்வாகிகள் களஆய்வு கூட்டத்தில் கைகலப்பு..!! முன்னாள் அமைச்சருக்கு என்னாச்சு? – நெல்லையில் பரபரப்பு

English Summary

SC agrees to hear Sisodia’s pleas seeking relaxation of bail condition

Next Post

பெற்ற மகளை 9 மாதங்களாக பலாத்காரம் செய்த தந்தை..!! புகாரளிக்க வந்த தாயிடம் சமாதானம் பேசிய தாய்..!! சென்னையில் பயங்கரம்..!!

Fri Nov 22 , 2024
"I want justice for my child. My child's health is very poor," the girl's mother tearfully pleaded.

You May Like