fbpx

பள்ளிக்கு வராத மாணவர்களை கண்டறிந்து அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..!

பள்ளி செல்லா குழந்தைகளைக் கண்டறிந்து மீண்டும் பள்ளிகளில் சேர்க்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் புதிய உத்தரவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், ”புலம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகளையும் கண்டறிந்து பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், 4 வாரங்களுக்கு மேல் பள்ளிக்கு வராத மாணவர்களைக் கண்டறிந்து அவர்களை மீண்டும் பள்ளிகளில் சேர்க்கும் வகையில் செயல்படக் கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், EMIS இணையதளம், செயலி மூலம் கணக்கெடுக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும்.

பள்ளிக்கு வராத மாணவர்களை கண்டறிந்து அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..!

சம்பாதிக்க வேண்டிய கட்டாயம், பள்ளிக் கட்டணம் கட்டாதது, உடல்நல பிரச்சனை, சிறப்புத் தேவை, குழந்தைத் திருமணம், இடப்பெயர்வு உள்ளிட்ட காரணங்களால் இடைநின்ற மாணவர்களைக் கண்டறிவதில் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும். அதனைத்தொடர்ந்து, 5, 8, 10-ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் முறையாக அடுத்தடுத்த வகுப்புகளில் சேர்ந்துள்ளனரா என்பதை உறுதி செய்ய வேண்டும். 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளைப் பள்ளிகளில் சேர்க்கத் தனிக் கவனம் செலுத்த வேண்டும்” என பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

தீபாவளிக்கு தயாராகும் ஆவின் சிறப்பு இனிப்புகள்..! இந்தாண்டு விற்பனை இலக்கு எவ்வளவு தெரியுமா?

Tue Jul 26 , 2022
தீபாவளி பண்டிகைக்கு ஆவின் சிறப்பு இனிப்புகள் அனைவரையும் சென்றடைய வேண்டும் என அதிகாரிகளுக்கு பால்வளத்துறை அமைச்சர் நாசர் அறிவுறுத்தியுள்ளார். தீபாவளி-2022 பண்டிகையை முன்னிட்டு ஆவினில் சுவைமிகுந்த சிறப்பு இனிப்பு வகைகள் விற்பனை செய்வது குறித்து பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தலைமையில், நேற்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில், கடந்த ஆண்டு தீபாவளியைப் போலவே, இந்த ஆண்டும் கீழ்க்கண்ட சிறப்பு இனிப்புகள் விற்பனை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. 1) காஜூ கட்லீ (250 […]
தீபாவளிக்கு தயாராகும் ஆவின் சிறப்பு இனிப்புகள்..! இந்தாண்டு விற்பனை இலக்கு எவ்வளவு தெரியுமா?

You May Like