fbpx

பள்ளிக்கூடத்துக்கு போன்னு சொன்னது ஒரு குத்தமா….? தாயின் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவர்….!

பள்ளிக்கு செல்லாமல் ஊர் சுற்றிய மாணவனை பள்ளிக்குப் போக சொல்லி தாய் கண்டித்ததால், மாணவன் தாயின் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே இருக்கின்ற உரசல்பட்டி கிராமத்தைச் சேர்ந்த காவேரி என்பவரின் மகன் சிவகிரி (14). இவர் உரசல்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகிறார். இவருடைய தந்தை ஐந்து வருடங்களுக்கு முன்னர், உயிரிழந்து விட்டார். இந்த நிலையில் தான், மாணவன் சிவகிரி பள்ளிக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்ததால், அவருடைய தாய் செல்வி கண்டித்துள்ளார்.

ஆகவே அந்த மாணவர் வருத்தத்துடன் காணப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரமாக பார்த்து, தன்னுடைய தாயின் குரலில் நீயே எடுத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் மாணவர் சிவகிரி. இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் வழங்கிய தகவலின் படி, கடத்தூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, உடலை கைப்பற்றி, தர்மபுரி அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

அந்த மாணவனின் மரணம் தொடர்பாக கடத்தூர் காவல்துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். உரசல்பட்டி கிராமத்தில், அந்த மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே சோகத்தை உண்டாக்கியுள்ளது.

Next Post

தமிழகத்தில் மட்டும்...! அஞ்சல் துறையில் 2,994 காலியிடங்கள்...! எப்படி விண்ணப்பிப்பது...? முழு விவரம்

Sat Aug 12 , 2023
அஞ்சல் துறை தமிழ்நாடு வட்டத்தில் 2994 கிராம அஞ்சல் ஊழியர்கள் (ஜிடிஎஸ்) காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த காலிப் பணியிடங்களில், சென்னை நகர மண்டத்தின் கீழ், 607 பணியிடங்களில் பணிபுரிய தகுதியான விண்ணப்பத்தாரர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை ஆன்லைனில் https://indiapostgdsonline.gov.in என்ற இணைய தளத்தின் மூலம் சமர்ப்பிக்கலாம். இணைய தளத்தில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 23.08.2023. கல்வித்தகுதி, மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடு மற்றும் இதர தகுதி […]

You May Like