fbpx

ஜாலி…! கனமழை காரணமாக இன்று இந்த 6 மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை…!

கனமழை காரணமாக விழுப்புரம், தேனி, திருச்சி மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு

மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளில் நிலவுகிறது. இது மேற்கு திசையில் நகர்ந்து, வலுவிழக்கக் கூடும். தெற்கு அந்தமான் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி இன்று நிலவும். இதன் காரணமாக வரும் 16-ம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகரலாம்.

தமிழகம், புதுச்சேரியில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 16-ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 17-ம் தேதி கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும் கன முதல் மிக கனமழையும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, திருச்சி, செங்கல்பட்டு மாவட்டங்களிலும், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

இந்த நிலையில் கனமழை காரணமாக திருச்சி, விழுப்புரம் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதேபோல தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை பள்ளிகளுக்கு சிறப்பு நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சேலம் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டத்தில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

English Summary

Schools in these 3 districts are closed today

Vignesh

Next Post

கனவில் இந்த 5 விஷயங்களை பார்த்தால் கவனமா இருங்க... பெரிய ஆபத்து வரப்போகிறது என்று அர்த்தமாம்..

Sat Dec 14 , 2024
Dream interpretation says that some dreams may indicate bad things or misfortune coming our way in the future.

You May Like