fbpx

ஜாலி.‌‌..!பள்ளிகளுக்கு ஜனவரி 3-ம் தேதி வரை குளிர்கால விடுமுறை அறிவிப்பு…! முழு பட்டியல் உள்ளே…

குளிர்காலம் காரணமாக வட இந்தியாவின் பல பகுதிகளில் வெப்பநிலை வெகுவாகக் குறைந்து வருவதால், மாணவர்கள் பள்ளிக்கு மிகவும் சவாலான ஒன்றாக உள்ளது. இதனால் பள்ளிகள் மாணவர்களுக்கு குளிர்கால விடுமுறையை அறிவித்திருப்பது பெரும் நிம்மதி கொடுத்துள்ளது. நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் உள்ள பள்ளிகளில் குளிர்கால விடுமுறைகள் குறித்த மாநில வாரியான பட்டியலை பார்க்கலாம்.

இம்முறை கிறிஸ்துமஸ் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துமஸ் மற்றும் வழக்கமான வார இறுதி நாட்களைத் தவிர, குளிர்கால விடுமுறையின் போது 10-15 நாட்களுக்கு பள்ளிகள் மூடப்படும். மேற்கு வங்க அரசு டிசம்பர் 26, 2022 அன்று பள்ளி விடுமுறை 2022 என அறிவித்துள்ளது. இது குறித்து மாநில அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்;கிறிஸ்துமஸுக்கு அடுத்த நாளான டிசம்பர் 26 அன்று அரசு விடுமுறை. அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பிற அலுவலகங்கள் அன்று மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான்

ராஜஸ்தான் அரசும் இதேபோல் குளிர்காலத்தில் 12 நாட்களுக்கு பள்ளிகள் மூடப்படும் என அறிவித்துள்ளது. அதன் படி, டிசம்பர் 25 முதல் ஜனவரி 5, 2023 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் இந்த முறை குளிர்கால விடுமுறை நாட்களின் எண்ணிக்கையை அதிகரித்து, கோடை விடுமுறையின் எண்ணிக்கையை குறைத்துள்ளது.

பஞ்சாப்

குளிர்கால விடுமுறைகள் இரண்டு கட்டங்களாக இருக்கும் என்றும் அந்த பகுதிகளின் வானிலைக்கு ஏற்ப பிரிக்கப்படும் என்றும் பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது. மேல் பஞ்சாபில் குளிர்கால விடுமுறை ஜனவரி 3 முதல் 13 வரை இருக்கும், மத்திய மற்றும் தெற்கு பஞ்சாபில் டிசம்பர் 23, 2022 முதல் ஜனவரி 6, 2023 வரை விடுமுறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு மற்றும் காஷ்மீர்

ஏற்கனவே பனிப்பொழிவு தொடங்கியுள்ள நிலையில், ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் பள்ளிகளுக்கு மூன்று மாத கால குளிர்கால விடுமுறையை அறிவித்துள்ளது.

Vignesh

Next Post

#Breaking: விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை...!

Tue Dec 13 , 2022
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை கனமழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று அறிவித்து மாவட்ட ஆட்சியர் மோகன் உத்தரவிட்டுள்ளார். அதேபோல, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு கேரளா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகம், […]

You May Like