fbpx

செம குட் நியூஸ்..!! நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை மூட மத்திய அரசு முடிவு..!!

இந்தியாவில் 4 வழிச்சாலைகளில் கிட்டத்தட்ட 60 கிலோ மீட்டருக்கு ஒரு முறை நாம் கட்டணம் செலுத்த வேண்டும். இதற்காக நாடு முழுவதும் டோல் பிளசாக்கள் அமைக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் உள்ள 1,181 சுங்கச்சாவடிகள் மூலம் ஆண்டுக்கு 40 ஆயிரம் கோடி ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகளில் இந்த வசூல் 1.40 லட்சம் கோடியாக உயரும் என்று கூறப்படுகிறது. டோல் பிளாசாக்கள் இல்லாமல் வேறு வழியில் சாலை பயன்பாட்டுக் கட்டணத்தை வசூலிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

முன்னதாக சுங்கச் சாவடிகளில் கூட்ட நெரிசலைக் குறைக்க ஃபாஸ்ட் டேக் முறையை மத்திய அரசு கொண்டு வந்தது. இதனால் வாகன ஓட்டிகள் கட்டாயம் பாஸ்ட் டேக்கை பயன்படுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். என்னதான் ஃபாஸ்ட்டேக் வந்தாலும் அது எதற்காகக் கொண்டு வரப்பட்டதோ அந்த பிரச்சனை மட்டும் இன்னும் தீரவில்லை. தற்போதும் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் வரிசையாக அணி வகுத்து நிற்கும் நிலை இருக்கிறது. எதிர்பார்த்த அளவிற்குப் பலனை ஃபாஸ்டேக் தரவில்லை. இந்நிலையில், மத்திய அரசு இந்த சுங்கச்சாவடி வசூல் முறையில் மாற்றம் கொண்டு வரத் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது.

தற்போது இருந்துவரும் ஃபாஸ்ட் டேக் முறையிலான சுங்கச்சாவடி கட்டண வசூலை மாற்றி நம்பர் பிளேட் ரீடிங் கருவிகள் அல்லது ஜிபிஎஸ் முறையிலான வசூல் முறையைக் கொண்டு வரலாம் என ஆலோசனை நடத்தியது. இதை அமல்படுத்துவதில் உள்ள சிக்கல் மற்றும் தொழில்நுட்ப சாத்தியங்களை மத்திய அரசு ஆய்வு செய்து வருகிறது. சுங்கச் சாவடியில் வாகனங்களின் காத்திருப்பு நேரம் 8 நிமிடமாக இருந்தது. ஃபாஸ்ட்டேக் வந்ததும் இது வெகுவாக குறைந்துள்ளது. 2020-21, 2021-22 ஆகிய காலகட்டங்களில் வாகனங்களின் காத்திருப்பு காலம் 47 நொடிகளாக மாறிவிட்டது. இவ்வளவு பெரிய மாற்றம் வந்தாலும் முக்கியமான பிரச்சனை அதிகமாக வாகனங்களைக் கையாளும் சுங்கச்சாவடிகளில் தான் இருக்கிறது. குறைவான வாகனங்களைக் கையாளும் சுங்கச்சாவடிகளில் அதிக கூட்ட நெரிசல் இல்லை. அங்கு வெறும் 10 நொடிகளில் கூட கடந்து விட முடிகிறது. ஆனால், அதிக வாகனங்களைக் கையாளும் சுங்கச்சாவடிகளில் 2 அல்லது 3 நிமிடம் வரை காத்திருக்கும் நிலை இருக்கிறது. இதன் காரணமாகவே சுங்கச்சாவடிகளையே அகற்றிவிட்டு ஜிபிஎஸ் முறையிலான டோல் கலெக்ஷன் சிஸ்டத்தை நடைமுறைப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

Chella

Next Post

’பொதுமக்கள் என்ன பிச்சைக்காரர்களா’..? ரூ.500 நோட்டுகளை தூக்கி வீசிய காங்கிரஸ் தலைவர்..!!

Wed Mar 29 , 2023
கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு மாண்டியாவில் காங்கிரஸ் சார்பில் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார் கலந்து கொண்டார். பெவினஹள்ளி அருகே பிரச்சாரம் செய்தபோது, பிரச்சார வாகனத்தின் மேல் நின்றவாறு, அங்கு வரவேற்பளிப்பதற்காக கலைநிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருந்தவர்கள் மீது 500 ரூபாய் நோட்டுகளை தூக்கி வீசினார். இதனால், அங்கிருந்த காங்கிரஸ் தொண்டர்களும், பொதுமக்களும் முட்டி மோதி அந்தப் பணத்தை எடுத்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள […]
’பொதுமக்கள் என்ன பிச்சைக்காரர்களா’..? ரூ.500 நோட்டுகளை தூக்கி வீசிய காங்கிரஸ் தலைவர்..!!

You May Like