சிறப்பு ஆசிரியர் மற்றும் தசைப்பயிற்சியாளர்களுக்கான மதிப்பூதியத்தை தமிழ்நாடு அரசு உயர்த்தி உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் சிறப்பு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு உதவி மானியம் வழங்கும் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் சிறப்பு ஆசிரியர் மற்றும் தசை பயிற்சிகளுக்கு வழங்கப்படும் மதிப்பூதியத்தை உயர்த்தி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, சிறப்பு ஆசிரியர் மற்றும் தசைப்பயிற்சியாளர்களுக்கான மதிப்பூதியம் ரூ.14,000இல் இருந்து ரூ.18,000 ஆக உயர்த்தி வழங்கப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் தசைப்பயிற்சியாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.