fbpx

16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை வீடியோ எடுத்துக் கொண்டே வீடியோ எடுத்துக் கொண்டே வேடிக்கை பார்த்த மகன்…..! சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்……!

கடந்த ஏப்ரல் மாதம் 16 வயது சிறுமியை 68 வயது முதியவர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். அதனை அந்த முதியவரின் செல்போனில் வீடியோ எடுத்தபடியே இந்த முதியவரின் மகன் வேடிக்கை பார்த்த கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது.

இந்த சம்பவம் நடைபெற்று 2️ மாத காலங்கள் ஆன நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை தான் பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை காவல்துறையை அணுகி புகார் வழங்கியிருக்கிறார். சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவரின் மகன் எடுத்த வீடியோவையும் அவர் காவல்துறையினரிடம் ஆதாரமாக காட்டியிருக்கிறார்.

இந்த கொடூர செயலில் ஈடுபட்ட முதியவர் இந்த சம்பவம் குறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று அந்த சிறுமியை மிரட்டி உள்ளார். இதனால் பயத்தில் இருந்த அந்த சிறுமி யாரிடமும் இது பற்றி சொல்லாமல் இருந்தார். ஒருநாள் அந்த முதியவரின் மகன் சிறுமியின் தந்தையிடம் தான் எடுத்த வீடியோவை காட்டிய பிறகு தான் அந்த சிறுமி தன்னுடைய தந்தையிடம் நடந்த அனைத்தையும் தெரிவித்து கதறி அழுதுள்ளார்.

முதியவர் அந்த சிறுமியின் வீட்டிற்கு அருகில் உள்ள வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. அடிக்கடி சிறுமியின் வீட்டிற்கு சென்று அவரிடம் பழகி வந்துள்ளார். சிறுமியின் குடும்பத்தினர் சென்ற ஆன்மீகப் பயணங்களில் கூட இந்த முதியவர் இடம் பெற்றிருந்ததாக சிறுமியின் தந்தை காவல் துறையிடம் தெரிவித்திருக்கிறார்.

இந்த நிலையில் தான் அந்த சிறுநீர் தன்னுடைய வீட்டிற்கு வெளியே தனியாக இருந்தபோது அந்த முதியவர் சிறுமியை தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்று ஒரு மறைவான இடத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக சொல்லப்படுகிறது. அப்போது அந்த முதியவரின் 40 வயது மகன் தனது தந்தையின் செயலை தன்னுடைய கைபேசியில் வீடியோவாக பதிவு செய்து இருக்கிறார்.

அந்த முதியவரின் மகன் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளுடன் அதே வீட்டில் தான் வசித்து வருகிறார். ஆனால் தந்தை மகனுக்குள் சமுகமான உறவு இல்லை என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்திருக்கும் காவல்துறையினர், தந்தை மற்றும் மகன் உள்ளிட்ட இருவரையும் கைது செய்து நீதிமன்ற காவல் இல்லை எடுத்து விசாரணை நடத்தி வருகிறது.

கைது செய்த தந்தை மகன் இருவர் மீதும் போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் வழங்க வேண்டாம் என்று வற்புறுத்தியதாக சிறுமியின் குடும்பத்தின் பக்கத்து வீட்டில் வசிக்கும் நரேந்தர் என்பவர் மீதும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர். அவர் மீது தனியாக கிரிமினல், மிரட்டல் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டு மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறார் மேலும் அவருக்கு மானல ஆலோசனை வழங்க குழந்தைகள் நல குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது என்று காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது

Next Post

இளம்பெண்ணை கற்பழித்து தீவைத்து எரித்துக்கொன்ற வாலிபர்..!! நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு..!!

Fri Jun 30 , 2023
இளம்பெண்ணை கற்பழித்து கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கேரள மாநிலம் படூர் பகுதியைச் சேர்ந்தவர் முகமது அஷ்ரப் (33). இவர் கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் பலேபுனி பகுதியில் தங்கி வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், சம்பவத்தன்று அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் வீட்டில் தனியாக இருந்தபோது முகமது அஷ்ரப் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பிறகு, இளம் […]

You May Like