fbpx

ஓடும் பேருந்தில் பெண் பயணியுடன் உடலுறவு..!! நடத்துனரின் மோசமான செயல்..!! வைரலாகும் வீடியோ..!!

ஓடும் பேருந்தில் பெண் பயணியுடன் நடத்துனர் உடலுறவில் ஈடுபட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதுதொடர்பான வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்தராஸ் டிப்போவைச் சேர்ந்த அரசுப் பேருந்து ஒன்று கடந்த சில தினங்களுக்கு முன்பு லக்னோவை நோக்கிச் சென்றுள்ளது. ஹாத்தராஸ் பகுதியிலிருந்து லக்னோ சுமார் 378 கி.மீ தூரத்தில் இருக்கிறது. பேருந்தில் பயணிக்க சுமார் 6 மணி நேரம் வரை ஆகும். இந்நிலையில், கடந்த 10 தினங்களுக்கு முன் இந்த பஸ் இரவு நேரத்தில் கிளம்பிய நிலையில், பஸ்சின் உள்ளே லைட்கள் எல்லாம் அணைக்கப்பட்டிருந்தது. பயணிகள் பெரும்பாலும் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்பொழுது ஒரு வித்தியாசமாகச் சத்தம் கேட்டுள்ளது. இதைக் கேட்டு சில பயணிகள் மட்டும் முழித்துள்ளனர்.

இந்த சத்தம் நடத்துனரின் சீட் அருகே இருந்து வருவதை அறிந்த அவர்கள், என்ன சத்தம் எனக் கேட்ட போது ஒரு பெண்ணின் முனங்கல் சத்தம் என்பதைத் தெரிந்து கொண்டனர். பின்னர் தங்கள் செல்போன் கேமராவை ஆன் செய்து செல்போன் லைட்டையும் ஆன் செய்து வீடியோ எடுத்துக்கொண்டே நடத்துனரின் சீட் பகுதிக்குச் சென்றனர். அங்கு தான் அவர்களுக்கு பெரும் அதிர்ச்சியே காத்திருந்தது. அங்கு நடத்துனரும் ஒரு இளம்பெண்ணும் ஒரு போர்வைக்குள் வெளிப்படையாக உடலுறவில் ஈடுபட்டு வந்துள்ளனர். லைட் வெளிச்சம் வருவதை பார்த்து இவர்கள் சுதாரித்துக் கொண்டனர்.

இதுதொடர்பான வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோ குறித்து விசாரித்த போது இந்த சம்பவம் 10 நாட்களுக்கு முன்பு எடுக்கப்பட்டது எனவும், இதுதொடர்பாக பயணிகள் புகார் அளித்ததன் பேரில் அந்த பேருந்தில் பணியாற்றிய ஓட்டுநர் மற்றும் நடத்துனர் ஆகியோர் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர் என ஹாத்தராஸ் பஸ் டிப்போ துணை மேலாளர் ஷாஷிராணி தெரிவித்துள்ளார். பொது இடத்தில் ஆண் பெண் உடலுறவு கொள்வது என்பது சட்டப்படி தவறான விஷயம். ஒரு பஸ் என்பது பொது இடமாகத் தான் கருதப்படும். குறிப்பிட்ட சம்பவத்தில் இரவு நேரம், பஸ்சில் லைட் எரியவில்லை என்பதை இந்த இருவரும் பயன்படுத்தி உடலுறவில் ஈடுபட்டுள்ளனர். இது சக பயணிகளுக்குத் தொந்தரவாக இருந்துள்ளது. அதனால் அவர்கள் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர்.

Chella

Next Post

மகாராஷ்டிரா அரசியலில் திருப்பம், பதவியேற்ற அஜித் பவார்..!

Sun Jul 2 , 2023
மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வருகிறது. இந்த சூழலில், எதிர்க்கட்சியாக உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான அஜித் பவார், கட்சியை உடைத்து பாஜக – சிவசேனா கூட்டணியில் இணைந்துள்ளார். சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்து வந்த அஜித் பவாருக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 30 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே, அஜித் பவார் உள்பட தேசியவாத காங்கிரஸ் […]

You May Like