குளிரும், பணியும் சேர்ந்து இருக்கின்ற நிலையில் மழையும் அதற்கான பங்கினை அளித்து வருகிறது. இந்த சமயத்தில் புயல்களும் உருவாகி வருகிறது.
இந்த மாதமான டிசம்பர் 9, 10ம் தேதிகளில் சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனத்த பலத்த மழை பெய்யக்கூடும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து மழையானது சென்னையில் நாளைய தினத்தில் இரவு நேரத்தில் மழை பெய்ய தொடங்க இருக்கிறது என்று அறிவித்துள்ளார். மாமல்லபுரம் மற்றும் பழவேற்காடு பகுதியின் இடையே 10ம் தேதி காலை நேரத்தில் புயல் கரையை கடக்க இருக்கிறது.
மேலும் கரையை நெருங்கும் போது புயலின் மையப் பகுதியானது சென்னையை நோக்கி நகர வாய்ப்புள்ளதால் சென்னையில் கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.