fbpx

முருகன் கோவிலில் நித்தியானந்தாவுக்கு சிலை..! கோலாகலமாக நடந்த கும்பாபிஷேகம்..! அதிர்ச்சியில் மக்கள்

நித்யானந்தா சீடர் ஒருவர் முருகன் கோயிலை கட்டி, அங்கு 18 அடியில் நித்யானந்தா சிலையை நிறுவி, கும்பாபிஷேகம் செய்துள்ள சம்பவம் விழுப்புரத்தில் நிகழ்ந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள பெரம்பை கிராமத்தில், பாலசுப்பிரமணியம் என்பவர் மலேசியாவில் உள்ள முருகன் கோயில்போல இங்கு ஒரு முருகன் கோயிலை கட்டிவந்தார். 27 அடி உயரத்தில் முருகன் சிலை பிரமாண்டமாக கட்டி முடிக்கப்பட்ட நிலையில், அந்தக் கோயிலுக்கு “பத்துமலை முருகன் கோயில்” என பெயரிடப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோயில் உள்ளே நுழையும்போது 18 அடி உயரத்தில் நித்யானந்தா உருவம் கொண்ட சிலையும் உருவாக்கப்பட்டிருந்தது. அச்சிலைக்கும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்த சிலையைப் பார்த்ததும் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

image

நித்யானந்தா, ஈசனைப் போன்று வேடமணிந்து கையில் சூலத்துடன் தோன்றிய காட்சியைப் போல் இந்த சிலை வடிவமைக்கப்பட்டிருந்தது. இதனால், சந்தேகம் அடைந்த பொதுமக்கள் கும்பாபிஷேகம் நடத்த வந்த சிவாச்சாரியார்களிடம் கேட்டபோது, இந்த சிலை, சிவனின் மற்றொரு அவதாரமான கால பைரவர் என்றும், ஸ்தபதி சிலையை முறையாக வடிவமைக்கவில்லை என்றும் கூறியதாக தெரிகிறது.

18 feet nithyananda statue in puducherry | 18 அடியில் நித்தியானந்தருக்கு  சிலை-கும்பாபிஷேகம்... அதிர்ந்துபோன பொதுமக்கள் – News18 Tamil

பின்னர், கோயில் நிர்வாகி பாலசுப்பிரமணியன் அறைக்குச் சென்று பார்த்தபோது, நித்யானந்தா புகைப்படங்கள் வழிபாட்டில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. நித்யானந்தா சீடர் ஒருவர் முருகன் கோயிலை கட்டி, அங்கு 18 அடியில் நித்யானந்தா சிலையை நிறுவி, கும்பாபிஷேகம் செய்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

எடப்பாடி பழனிச்சாமி ஐகோர்ட்டில் மனு தாக்கல்... அதிமுக அலுவலகத்தை திறக்க மனு...!

Tue Jul 12 , 2022
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஈபிஎஸ் மற்றும் ஓபிஸ் ஆதரவாளர்கள் இடையே கடுமையாக மோதல் ஏற்பட்டது. அவர்களை காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர். மோதல் சம்பவத்தை அடுத்து கட்சி தலைமை அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் ஏராளமான காவல் துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சட்டம் ஒழுங்கு தொடர்பாக, ராயப்பேட்டை காவல் நிலையத்தில், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் ஆலோசனை நடத்தினர். அப்போது, அதிமுக தலைமை அலுவலகத்திற்கு […]

You May Like