fbpx

பள்ளி விழாவில் வழங்கப்பட்ட உணவை சாப்பிட்டதால் வாந்தி, மயக்கம்..! மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி…!

கேரளா மாநிலம் கீழ்வாய்ப்பூரில் தனியார் பள்ளி நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட உணவை சாப்பிட்ட சில பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு பாதிக்கப்பட்டனர். கடந்த வாரம் தேவாலயத்தில் ஞானஸ்நானம் வழங்கும் நிகழ்வின் போது இதேபோன்ற சம்பவம் பதிவாகிய ஏற்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் அதே போன்று ஒரு நிகழ்வு நடைபெற்று இருப்பது பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது. கீழ்வாய்ப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பரிமாறப்பட்ட உணவை சாப்பிட்ட 100க்கும் மேற்பட்டோர் நோய்வாய்ப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 6 ஆம் தேதி பள்ளியில் இந்த நிகழ்வு நடைபெற்ற நிலையில், நான்கு குழந்தைகள் உட்பட 7 முதல் 8 பேர் வாண்டி மயக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் ஞாயிற்றுக்கிழமை கிடைத்ததாக கொடுமண் காவல் நிலைய அதிகாரி தெரிவித்தார். வழக்கமான பணியின் போது இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தெரியவந்ததாகவும், இது தொடர்பாக இதுவரை எந்த புகாரும் வரவில்லை, சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

கள்ளக்காதலனுடன் கணவரை பிளான் போட்டுக் கொன்ற மனைவி.. கால்வாய் நீரில் முடிவுகட்டிய சம்பவம்..!

Mon Jan 9 , 2023
ஆந்திர மாநிலம் ஸ்ரீசிட்டி பகுதியில் வெங்கையாவும் அவரது மனைவி முகுந்தாவும் வசித்து வந்தனர். உதய்சாய் மற்றும் அவரது மனைவி உஷா அவர்கள் பக்கத்து வீட்டில் குடியேறினர். வெங்கையா பணிபுரிந்த ஒர்க்ஷாப் தொழிற்சாலையில் உதய்சாயும் பணிபுரிந்ததால், இருவரும் நீண்ட நாட்களாக நெருங்கிய நண்பர்கள். அதேபோல் இருவரது குடும்பத்தினரும் நெருக்கமாக இருந்துள்ளனர். இந்நிலையில், வெங்கையாவின் மனைவி முகுந்தாவை உதய்சாய் காதலித்து வந்தார்.  இதையறிந்த முகுந்தாவின் கணவர் வெங்கையா இருவரையும் கண்டித்துள்ளார். இதனால், இருவரும் […]
தகன மேடையில் எரிந்த பெண்ணின் சடலம்..!! இறைச்சியை பங்கு போட்டு சாப்பிட்ட அதிர்ச்சி சம்பவம்..!!

You May Like