கேரளா மாநிலம் கீழ்வாய்ப்பூரில் தனியார் பள்ளி நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட உணவை சாப்பிட்ட சில பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு பாதிக்கப்பட்டனர். கடந்த வாரம் தேவாலயத்தில் ஞானஸ்நானம் வழங்கும் நிகழ்வின் போது இதேபோன்ற சம்பவம் பதிவாகிய ஏற்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் அதே போன்று ஒரு நிகழ்வு நடைபெற்று இருப்பது பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது. கீழ்வாய்ப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பரிமாறப்பட்ட உணவை சாப்பிட்ட 100க்கும் மேற்பட்டோர் நோய்வாய்ப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 6 ஆம் தேதி பள்ளியில் இந்த நிகழ்வு நடைபெற்ற நிலையில், நான்கு குழந்தைகள் உட்பட 7 முதல் 8 பேர் வாண்டி மயக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் ஞாயிற்றுக்கிழமை கிடைத்ததாக கொடுமண் காவல் நிலைய அதிகாரி தெரிவித்தார். வழக்கமான பணியின் போது இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தெரியவந்ததாகவும், இது தொடர்பாக இதுவரை எந்த புகாரும் வரவில்லை, சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.