தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் வேலைவய்ப்பு அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. காவல் சார்பு ஆய்வாளர்கள் பதவிகளுக்கான நேரடி தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி விவரம்: காவல் சார்பு ஆய்வாளர்கள்- தாலுகா, ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை
பணியிடங்கள்:
ஆண்கள்: 469
பெண்கள்:152
மொத்த பணியிடங்கள்: 621
கல்வி தகுதி: 10-ஆம் வகுப்பு தேர்ச்சி. மொத்தம் பணியிடங்களில் 20 சதவீத இடங்கள் தமிழ் மொழிவழிக் கல்வி பயின்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது.
வயது வரம்பு: 20-30
தேர்வு முறை: எழுத்து தேர்வு, உடற்தகுதி தேர்வு, மருத்துவ பரிசோதனை, எவ்வித குற்ற வழக்குகளும் இல்லாதவர் என்ற நற்சான்று விசாரணை.
விண்ணப்ப கட்டணம்: ரூ.500
விண்ணப்பிக்கும் முறை: தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://tnusrb.tn.gov.in./ என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதில் சுய விவரங்களை பூர்த்தி செய்து ரெஜிஸ்டர் செய்த பிறகு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.06.2023
இந்த பணி குறித்த கூடுதல் தகவல்களை https://www.tnusrb.tn.gov.in/pdfs/Notification_en.pdf– என்ற லிங்க்கை க்ளிக் செய்யவும்.