தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் ரூ.500 கோடி பரிவர்த்தனைக்கான எந்த விவரங்களும் கணக்கில் காட்டப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரெடிட் கார்டு மூலம் மேற்கொள்ளப்பட்ட ரூ.110 கோடிக்கான பரிவர்த்தனை குறித்து வங்கி நிர்வாகம் தகவல் கொடுக்கப்பட்டது வருமானவரித்துறை சோதனை மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அதே போல 10 ஆயிரம் வங்கி கணக்குகளில் ரூ.2,700 கோடி பரிவர்த்தனை தொடர்பான விவரங்கள் அனைத்தும் மறைக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் நடத்தப்பட்ட சோதனை குறித்து வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது.
மற்ற நாடுகளில் “குடியிருப்பு” கணக்கு வைத்திருப்பவர்கள் பற்றிய தானியங்கு தகவல் பரிமாற்றத்திற்கான (AEOI) படிவம் 61B இன் குறைபாடுள்ளதாய்ச் சரிபார்ப்பில் தெரியவந்துள்ளது. சமீப காலத்திலும், உத்தரகாண்டில் உள்ள 2 கூட்டுறவு வங்கிகளில் துறையால் சரிபார்ப்பு நடத்தப்பட்டது மற்றும் வங்கிகளால் தெரிவிக்கப்படாத சில ஆயிரம் கோடிக்கு அதிகமான பரிவர்த்தனைகள் அடையாளம் காணப்பட்டன.